Friday, July 22, 2011

திரு உமர் அவர்களின் “நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு.





பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு:


வாசகர்களே, வெகு காலமாக தலை மறைவாக இருந்த நமது நண்பர் திரு உமர் அவர்கள், இப்பொழுது புது பொலிவுடன் திரும்பி வந்துள்ளார், ஆன்னல் இதற்க்கு முன்னர் அவர் செய்தது போன்றே வார்த்தை ஜாலங்களை முன் வைத்து, பொய் கூற்றுகளை வெளியிடுபவராகவே அவர் இப்பொழுதும் திகழ்கிறார்.


சமீபமாக “இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கொஞ்சம் நான் பிரீயாக உள்ளேன்” என்று தலைப்பை வைத்து விட்டு, நமக்கு பதில் அழிக்க போவதாக திரு உமர் அவர்கள் வீர முழக்கம் வெளியிட்டு இருந்தார். இதை அறிந்த நாம், திரு உமர் அவர்கள் இதற்க்கு முன்னரே தோல்வியுற்று சென்ற “ஸஃபிய்யாவின் திருமணம் தொடர்பான தொடர் கட்டுரைக்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து, கையெப்பம் இட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு எதிர் வாதம் வரைவார் என்று எதிர் பார்த்து இருந்தோம். இன்னும் "அல்லேலூயா", ஹிப்ரேவ் மொழியின் יהוה என்ற வார்த்தைக்கு சரியான உச்சரிப்பு "யேகோவா", கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் “இருக்கிறவன்”, கிறிஸ்தவ விபச்சார பைபிள் வசனங்கள், கிறிஸ்தவ தீவிர வாதம், கிறிஸ்தவ கற்பழிப்பு, பைபிள்லின் சரித்திர பிழை, மற்றும் அஹிம்சையை கையாள மறுத்த ஏசு போன்ற பல தலைப்புகளில் நாம் முன்னரே விடுத்து இருந்த மறுப்பு கட்டுரைகளில் ஒன்றின் மீதாவது, திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவார் என்று எதிர் பார்த்து இருந்தோம். ஆனால் இவை அனைற்றையும் மறுத்து, முன்னரே நாம் தெளிவான ஆதாரங்களை முன் வைத்து விளக்கம் அழித்த கருத்தினை, இன்றளவில் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் எதிர் வாதம் செய்யாத நிலையில், மிண்டும் அதே கருத்தினை தெரிவிக்கும் வகையில், அதே ஆதாரத்தை திரித்து அறிவித்து, புதிய கட்டுரை போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் வகையில், திரு உமர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள். இதன் முலம் தன்னால் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தெளிவான ஆதாரத்தை எடுத்து வெளியிட முடியவில்லை என்று திரு உமர் அவர்களே தனக்கு தாமே சாட்சி கூறியுள்ளார்கள்.


நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?என்ற கட்டுரை தலைப்பில் திரு உமர் அவர்கள் வெளியிட்ட கருத்தினையும், இதற்க்கு முன்னரே நாம் வெளியீட்ட மறுப்புகளையும் காண்போம்:


1

திரு உமர் அவர்கள் வெளியீடு கருத்து:

“இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.”


5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.

Volume :6 Book :68



திரு உமர் அவர்கள் இந்த ஆதாரத்தையும் இதே கருத்தையும் இதற்க்கு முன்னர் இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார் அதர்க்கு இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு: என்ற தலைப்பில், திரு உமர் அவர்கள் வெளிட்ட ஆதாரத்தை ஆராயும் வண்ணம் வெளியிட்டு இருந்தோம். இன்னும் அதிகபடியாக, இந்த தலைப்புக்கு சம்பந்தம் உடைய இன்னும் சில தெளிவான ஆதாரங்களை முன் வைத்து மறுப்பு வெளியிட்டு இருந்தோம், இந்த கட்டுரையை நாங்கள் வெளியிட்டு ஏறத்தாழ நான்கு மதங்களுக்கு மேல் ஆனா நிலையில், இதற்க்கு இன்னும் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் மறுப்பு வெளியிடாத நிலையில், இந்த கருத்தை மிண்டும் அறிவிக்கிறார்.


திரு உமர் அவர்கள் வெளியிட்டு மேலே கோடிட்ட ஆதாரத்தில் இருந்தே அந்த பெண்ணுக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு இதற்க்கு முன்னரே திருமணம் ஒப்பந்தம் செய்ய பட்டு இருந்தது தெளிவாகுகிறது,

  • திரு உமர் அவர்களே, முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்த பெண்ணை, கணவன் அழைப்பது உங்கள் அகராதியில் கற்பளிப்பா? முறையே திருமணம் முடிக்காமல் பெண்களுடன் வீடு கூட பணிக்கும் பைபிளை (Genesis 30:9-10, Numbers 31:17-18) புகழ முன் வரும் நீங்கள், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் முறையே திருமண ஒப்பந்தம் செய்த பெண்ணை அணுகினால் தவறு என்று கூர முன் வருகிறீர்களே? இஸ்லாமில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமண ஒப்பந்தம் முறையே முடிந்தால், அவர்கள் கணவன் மனைவி ஆவார்கள் என்பது இஸ்லாமிய அறிஞராக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாதா?
  • கற்பழிக்க கடத்தி வர பட்ட பெண் தன் உறவினரையும் அழைத்து வருவாளா?
  • கற்பழிக்க கடத்தி வரப்பட்ட பெண்ணிடம் கற்பழிக்க யாரேனும் அனுமதி கேட்பார்களா?
  • முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அந்நாளில் பெர் அரசர் அவ்வார், உயர்ந்த குலத்தை சேர்ந்தவர், அவரை அவமானம் படுத்த எண்ணியா அந்த பெண் முதலில் திருமணத்திற்கு சம்மதித்து விட்டு பிறகு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு செய்கிறார்.
  • திரு உமர் அவர்களே, உங்கள் கூற்றுப் படி, கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்ட பெண்ணை, முறையே திரும்பி அனுப்ப பணிக்கும் பொழுது, அவருக்கு அன்பளிப்பு அளித்து முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்ப பணித்ததை நீங்கள் உங்கள் ஆதாரம் முலமே விவரித்துள்ளீர்கள். இது எப்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு சாத்தியம் ஆயிற்று? தன்னை இழிவு செய்த பெண்ணுக்கு அன்பளிப்பு அளிக்க நடைமுறையில் எவருக்கும் மனம் வருமா? ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த உயர்ந்த குணம் இருந்தது என்று நீங்களே சாட்சி கூருகிறீர்கள். இப்படி எதிரிகள் வாயிலே அவருடைய மேன்மையை இறைவன் பரவ செய்வது ஒன்றே உங்களுக்கு போதவில்லையா? இறைவன் உங்களுடன் இல்லை என்பதை உணர. திரு உமர் அவர்களே, கற்பழிப்புக்கு பிறகு அந்த பெண் மீது விருப்பம் இல்லாமல் போனால் விரட்டி அடிக்க சொல்லும் (Deuteronomy 21:10 14) பைபிளை போற்ற முன் வரும் நீங்கள், தன்னை திருமணம் முடித்து இழிவு செய்த பெண்ணை அன்பளிப்பு அளித்து அனுப்ப பனித்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு செய்ய முயற்சிக்கிறீர்களே?
  • திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், தன்னை இடையர் என்று இழிவு செய்த பெண்ணை ஒரு மன்னர் எவ்வாறு திரும்பி செல்ல அனுமதிப்பார்? உங்கள் கூற்று படி, தன் விருபதிற்காக பலவந்தமாக அழைத்து வரவழைக்கபட்ட பெண்ணை, மீண்டும் அனுப்ப முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது? இது ஒன்றே போதவில்லையா, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மேன்மை பற்றி உங்களை அறியாமலே நீங்கள் அளித்த நற் சான்றிதழ் இது என்பதை உணர. தன்னிடம் உதவி நாடி வந்த பெண்ணை நாய் என்று உதாரணம் காட்டிய (Mark 7:27-29) உங்கள் ஏசுவை காட்டிலும் தன்னை இழிவு செய்த பெண்ணை உபசரித்து அனுப்பிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மேன்மையானவர் என்று நீங்களே அளித்த நற் சான்றிதழ் தானே இந்த கட்டுரை?



இதை போன்று இன்னும் அதிக படியாக தெளிவான ஆதாரத்தை நாம் இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு: என்ற கட்டுரையில் அறிவித்து இருந்தோம், ஆதற்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் மறுப்பு வெளியிடுவாரா??

2

திரு உமர் அவர்கள் வெளியீடு கருத்து:

“நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா?


5637. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனூ சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். 56

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று 'பனூ சாஇதா' குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு 'எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்:

ஸஹ்ல்(ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பரும்னோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.

Volume :6 Book :74



திரு உமர் அவர்கள் இந்த ஆதாரத்தையும் இதே கருத்தையும் இதற்க்கு முன்னர் அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்..” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். திரு உமர் அவர்கள் அறிவித்து மேலே கோடிட பட்ட ஆதாரம் தெளிவாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் திருமணம் ஒப்பந்தம் புரிய, சம்மதம் கேட்க அந்த பெண்னை அழைத்து வர பணித்தார் என்று அறிவிக்க அதை மறுத்து தன் பொய் கூற்றை வாசகர்களை நம்பா பணிக்கிறார்.


திரு உமர் அவர்களே:

  • கற்பழிக்க கடத்தி வர பட்ட பெண் வேறு குலதொரின் ('பனூ சாஇதா') கோட்டையில் தங்க வைக்க படுவார்களா?
  • கற்பழிக்க கடத்தி வர பட்ட பெண்ணிடம் யாரேனும் அனுமதி கேட்பார்களா? இவ்வாறு அனுமதி கேட்டு உங்கள் பைபிள் கற்பழிப்புக்கள் நடந்தேரியதா (Judges 21:10-24 NLT)??
  • உங்கள் கருத்து உண்மை என்றால், கடத்தி வர பட்ட பெண்னை ஏன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கற்பழிக்காமல் விட்டார்கள்?
  • உங்கள் ஆதாரத்தில், திருமண சம்மதம் கேட்ட நபர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் என்று தெரிந்த உடன் ஏன் அந்த பெண் “'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று வருத்த பட்டாள்?


திரு உமர் அவர்களே நாங்கள் கோடிட்ட பைபிள் வசனங்களுக்கு தெளிவான ஆதாரம் வைத்து விளக்கம் அளிப்பீர்களா??

3

திரு உமர் அவர்கள் வெளியீடு கருத்து:

“நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார்.


உமர் செய்த மொழிபெயர்ப்பு:

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)


இந்த மொழிபெயர்ப்பின் மூலம் என்று உமர் அறிவிப்பது:

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)



திரு உமர் அவர்கள், இந்த ஆதாரத்தையும், இதே கருத்தையும், இதற்க்கு முன்னர் முகமதுவின் (ஸல்) தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார், அதர்க்கு “முகமதுவின் (ஸல்) தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார் என்ற கட்டுரைக்கு பதில்” என்ற தலைப்பில், திரு உமர் அவர்கள் வெளிட்ட ஆதாரத்தை ஆராயும் வண்ணம் வெளியிட்டு இருந்தோம். இன்னும் அதிகபடியாக இந்த தலைப்பு சம்பந்தம் உடைய இன்னும் சில தெளிவான ஆதாரங்களை முன் வைத்து மறுப்பு எழுத்தி இருந்தோம், இந்த கட்டுரையை நாங்கள் வெளியிட்டு ஏறத்தாழ எட்டு மதங்களுக்கு மேல் ஆனா நிலையில், இதற்க்கு இன்னும் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் மறுப்பு வெளியிடாத நிலையில் இந்த கருத்தை மிண்டும் அறிவிக்கிறார்.


திரு உமர் அவர்களின் பொய்யுறை சம்பந்தமாக நாங்கள் வெளியிட்ட மறுப்பு:

பைபிளை இலங்கையை சேர்ந்த ஹிந்துமத பண்டிதர் திரு ஆறுமுக நாவலர்தவறாக மொழிபெயர்ப்பு செய்தது போல், நமது நண்பர் திரு உமர் அவர்கள் செய்யும் இட்டுக்கட்டு நிறைந்த மொழி பெயர்ப்பு...


திரு உமர் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பையும் அதன் மூலத்தையும் ஒன்று சேர்த்து சரிபார்த்தால், அவர் செய்யும் வார்த்தை ஜாலங்கள், மற்றும் இடை சொருகள்களை நாம் அறிய முடியும்:

அல் தபரிசரித்திர மூலம் (இந்த சரித்திரத்தின் அறிவிப்பாளர்கள்) :

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah:

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

சரித்திர அறிவிப்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

நம்முடையா கருத்து:

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த சரித்திர அறிவிப்பாளர்கள் பற்றி திரு உமர் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஏதிராக எவர் அறிவித்தாலும் அவர்களது நம்பிக்கைதுவம் பற்றி அறிய திரு உமர் அவர்களுக்கு விருப்பமில்லை.

அல் தபரிசரித்திர மூலம் :

While the Prophet was lying with Safiyyah

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு.

நம்முடையா கருத்து:

திரு உமர் அவர்கள் அகராதியில் “lying” என்றாலே உடலுறவு என்று அர்த்தம் போலும்...

அல் தபரிசரித்திர மூலம்:

Abu Ayyub stayed the night at his door

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார்.

நம்முடையா கருத்து:

“stayed the night at his door” என்றால் வாசலோரம் தங்குவதை குறிக்கிறதா? அல்லது இரவெல்லாம் கதவு பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதை குறிக்கிறதா ?

அல் தபரிசரித்திர மூலம் :

When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him.

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார். இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார்.

நம்முடையா கருத்து:

அபூ அய்யுப் ஏன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார்? இஸ்லாமியர்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறுவது மகிழ்ச்சியை வெளிபடுத்த மட்டும் தானா? அல்லது மாஷா அல்லாஹ்என்பது மகிழ்ச்சியை வெளிபடுத்த வழக்கத்தில் உள்ளதா? ஒருவர் நம்மீது சந்தேக பார்வை செய்தல் அதற்க்கு "அல்லாஹு அக்பர்" நான் அப்படியல்ல என்று விலகுவது வழக்கத்தில் உள்ளது இதை இஸ்லாமிய மார்க்க அறிஞ்ர் என்று தன்னை கட்டிகொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் அறியவில்லையா? ? இதை அறியாமல் தான் திரு உமர் அவர்கள் முன்னர் வரைந்தா தன் கட்டுரைக்கு Answering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா! அல்லாஹு அக்பர்!!! என்று தலைப்பு வைத்தார்ரா? வாளுடன் வாசலில் தங்கி இருக்கும் தன்னை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தன்னை கொள்ள வந்தவர் என்று தவறாக என்ன கூடும் என்பதால் அபூ அய்யுப் "அல்லாஹு அக்பர்" அதுவல்ல தன் எண்ணம் என்று விலகுகிறார்.

அல் தபரிசரித்திர மூலம் :

he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you.

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள்,அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்)

நம்முடையா கருத்து:

அபூ அய்யுப் இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்) உரைத்தாரா? அல்லது அபூ அய்யுப் தான் வாளுடன் இருப்பதனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொள்ள வந்ததாக தப்பாக நினைக்க கூடும் என்பதால் தான் இங்கு தங்கி இருந்த நோக்கத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு விலகினாரா ?

அல் தபரிசரித்திர மூலம் :

The Prophet laughed and said "Good".

திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பு:

இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.

நம்முடையா கருத்து:

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அபூ அய்யுப் செய்தது நல்லது என்று அறிவித்தாரா அல்லது அபூ அய்யுப் தான் தங்கி இருந்த நோக்கத்தை அறிவித்தவுடன் அதை கேட்டு சிரித்தாரா? ஒரு மனிதர் தன் தவறாக கருத படுவோம் என்ற எண்ணத்தில் தன்னுடைய நோக்கத்தை விவரிக்கும் பொழுது “OK”, “Good”, “fine”, “that’s good” etc.. என்று சொல்வது (நான் தவறாக நினைக்கவில்லை என்பதை விளக்க) வழக்கத்தில் உள்ளதாகவும், இப்படி சொல்வது அவர்கள் சொல்வதை நாம் செவிமடுத்தோம் என்பதை அறிவிபதற்காக அன்றி அவர்கள் செய்தது மிகவும் நல்லது என்பதை அறிவிபதற்காக அல்ல இதை திரு உமர் அவர்கள் அறிய வில்லையா?



இந்த இடைசொருகள்கள் நிறைந்த பிழையான மொழிபெயர்ப்புடன் திரு உமர் அவர்கள் முன்வைத்த கேள்வி: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்


நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, நீங்கள் சொல்வது போல, மதினாவின் மன்னராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்கள் படை வீரர்களை தங்கள் தோழர்களாக தான் நடத்தினார்கள், அந்த படை வீரர்கள், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை, தங்களது எதிரிகளான நயவஞ்சக யூதர்களிடம் இருந்து காக்க எந்நேரமும் ஆயித்தமாக இருந்தார்கள்.


நீங்கள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தில், மதினாவின் மன்னர்ராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், எதிரி நாட்டு யூத தலைவரின் மகளை அவள் அனுமதியுடன் திருமணம் முடித்து 'சத்துர்ரவ்ஹா' என்ற வெட்டவெளியில் கூடாரம் அமைத்து (புஹாரி: 2235) வீடு கூட விருக்கும் வேளையில், அவள் நயவஞ்சகர் கூட்டத்தில் இருந்து வந்தமையால், அவள் மீது நம்பிக்கை இல்லாமல், அவள் சதி செய்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொல்ல கூடும் என்ற எண்ணத்தில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் முன்னனுமதி பெறாமலே, அபூ அய்யுப் என்ற படை வீரர் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் வாயிலில் தங்கி இருந்தார்.


ஒரு நாட்டின் மன்னரை, எதிர் நாட்டு நயவஞ்சகர்களிடம் இருந்து காக்க, ஒரு படைவீரன் பொறுப்புணர்வுடன் காவல் காக்க நினைப்பது திரு உமர் அவர்களின் அகராதியில் குற்றமா? கைபர் யூததிருக்கு பிறகு வெற்றி கொண்ட நிலத்தை நிபந்தனையின் அடிப்படையில் எதிரிகளுக்கே வழங்கிய பிறகும், அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொல்ல சதி செய்ததை, இஸ்லாமிய அறிஞர் என்று தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள் அறியவில்லையா? இந்த நயவஞ்சகத்தை அறிந்த பிறகும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த ஈன செயல் செய்த நயவஞ்சகர்களை தண்டிக்காமல், மன்னித்து அனுப்பிநார் என்ற ஹதிஸ்சை திரு உமர் அவர்கள் அறியவில்லையா?


Bukhari 2331. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, 'அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப்பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிடவேண்டும்)' என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள். Volume :2 Book :41


Bukhari 4249. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது. Volume :4 Book :64


Bukhari 3169. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், 'சரி (உண்மையைச் சொல்கிறோம்)" என்று பதிலளித்தார்கள்..... பிறகு, 'நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி, அபுல் காசிமே!" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (கலந்திருக்கிறோம்)" என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது" என்று பதிலளித்தார்கள். Volume :3 Book :58



திரு உமர் அவர்களே, ஸஃபிய்யாவிறக்கு நடந்தது கற்பழிப்பு என்றால், அவர் நினைத்து இருந்தால், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தனிமையில் இருக்கும் வேளையில் அவரை கொன்று இருக்க கூடும், தன் நயவஞ்சக யூத கூட்டத்தாருடன் சேர்ந்து அவருக்கு எதிராக சதி செய்து இருக்க கூடும, அல்லது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மறைவுக்கு பிறகாவது அவருக்கு ஏதிராக அவதூறு எழுப்பி இருக்க கூடும், அவ்வாறாக ஏதேனும் தெளிவான ஆதாரத்தை எடுத்து வைக்க நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன் வரவில்லையா?


ஸஃபிய்யாவுடன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்த அடிமை திருமணத்தை இடை சொருகள்கள் செய்து விவரிக்க மூன் வரும் திரு உமர் அவர்கள், பைபிள் என்னில்லடங்க அடிமை பெண்களை திருமணம் இன்றி அனுபவிக்க தெளிவான வசனங்கள் கொண்டு பரிந்துரைப்பதை, அவர் சொந்த கூற்று கொண்டு விளக்காமல் பைபிள் உதவியுடன் விளக்குவார் என்று நம்புவோம்.

Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace.20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.

Deuteronomy 21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners, 21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13 discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.



ஒன்றுக்கு மேல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த திருமணத்தை பரிகாசிக்க முன் வரும் திரு உமர் அவர்கள், பைபிள் ஒரு மனிதன் ஒரு பெண்ணுக்கு அதிகமாக பெண்கள்ளுடன் வீடு கூடினால் அவர்களை எவ்வாறு நடத்த படவேண்டும் என்று அறிவிக்கும் சட்டத்தை விவரிப்பாரா? பைபிள்ளின் இறைவன் மனிதருக்கு ஒரு மனைவிக்கு மேல் அனுமதிக்கவில்லை என்றால், ஒரு பெண்ணுக்கு மேல் வீடு கூடினால் அவர்களிடையே நடத்த படவேண்டிய சட்டத்தை இப்படி தெளிவான வசனங்கள் கொண்டு அறிவிப்பானா?

Deuteronomy 21:15 Suppose a man has two women, one whom he loves more than the other, and they both bear him sons, with the firstborn being the child of the less loved women.21:16 In the day he divides his inheritance he must not appoint as firstborn the son of the favorite women in place of the other women son who is actually the firstborn. 21:17 Rather, he must acknowledge the son of the less loved women as firstborn and give him the double portion of all he has, for that son is the beginning of his father’s procreative power – to him should go the right of the firstborn.



திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக வணங்க விரும்பும் ஈஸா (அலை) அவர்கள் உங்கள் அகராதி படி இந்த பழி பாவ செயலை இறைவனுடன் சேர்ந்தே செய்தாரா? அவர் இதை கண்டிக்க முயற்சிக்க வில்லையா? பைபிள் அறிவிக்கும் இந்த சட்டதிட்டங்களை அவர் எதிர்தாரா?

Matthew 5:17 “Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfill them. 5:18 I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. 5:19 So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. 5:20 For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven.



திரு உமர் அவர்களே, இன்னும் எத்தனை காலங்கள் தான் இப்படி உங்கள் பொய் கூற்றுகளை மட்டுமே முன் வைத்து ஆதாரம் இல்லாமல் கட்டுரைகள் வரைய போகிறீர் என்று பார்ப்போம். நீங்கள் உண்மையாளராக இருந்தால் நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு தெளிவான ஆதாரத்தை எடுத்து கொடுக்க முன் வரவில்லையா? அல்லது பைபிள் உங்களுக்கு இப்படி தான் தெளிவான ஆதாரம் இல்லாத பொய் கூற்றை கட்டுரை வரைய உங்களுக்கு பயிற்சி கொடுக்கிறதா? இனியேனும் நாங்கள் விட்டு வைத்துள்ள கேள்விகளுக்கு உங்கள் கிறிஸ்தவத்தை முழுமையாக அறிந்து பொய்யுரைகள் இல்லாமல் பதில் அளிப்பீர்களா??


திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தீர் “நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.”


திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட கருத்தினை அறிவித்த நீங்கள், இதை போன்ற மோசடியை செய்த இன்னொரு நபரை இதற்க்கு முன்னரே நாங்கள் “உமர் அவர்களின் பொய்யுரை தொடர்ச்சி முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?” கட்டுரைக்கு பதில்:” என்ற தலைப்பில் கோடிட்டு இருந்தோம். அவரை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் இன்னும் அறிவிக்க வில்லையே அது ஏன்? ஒரு ஆதாரம் தெளிவாக ஒன்றை அறிவிக்க, அதை மறுத்து, உங்கள் கூற்றுகளை திரித்து வாசகர்களை நம்பா பணிக்கும் நீங்கள், நீங்கள் வணங்கும் ஜீசஸ் அவர்களுடன் இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில் ஒருவரான பிலிப் இயற்றியதாக நம்பப்படும் கோச்பேல் ஆப் பிலிப்பை ஏற்க மறுக்கிறீர்ரே. முகவரி அல்லாதோர் தங்கள் கனவை (revelation) அறிவித்தாலும் அதை இறைவேதம் என்று ஏற்க்க முன் வரும் நீங்கள், ஜீசஸ் அவர்களுடன் இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில் ஒருவரான பிலிப் இயற்றிய கோச்பேல் ஆப் பிலிப்பை ஏற்க்க மறுப்பது ஏன்? அப்படி என்றால் ஜீசஸ் அவர்களை பார்த்திராத, கேட்டிராத மனிதர்கள் எழுத்தி வைத்ததை மட்டுமே நீங்கள் ஏற்பவரா?


Gospel of Philip

Main article: Gospel of Philip

Gospel of Philip, dating from the 2nd or 3rd century, survives in part among the texts found inNag Hammadi in 1945.[19] In a manner very similar to John 19:25-26, the Gospel of Philip presents Mary Magdalene among Jesus' female entourage, adding that she was hiskoinônos, a Greek word variously translated in contemporary versions as partner, associate, comrade, companion.[20]

There were three who always walked with the Lord: Mary, his mother, and her sister, and Magdalene, the one who was called his companion. His sister,[21] his mother and his companion were each a Mary.[19]

And the companion of [the saviour was Mar]y Ma[gda]lene. [Christ loved] M[ary] more than [all] the disci[ples, and used to] kiss her [often] on her [mouth]. The rest of [the disciples were offended by it and expressed disapproval]. They said to him, "Why do you love her more than all of us?" The Saviour answered and said to them, "Why do I not love you like her?"[19]

Ref: http://en.wikipedia.org/wiki/Mary_Magdalene


“Jesus loved Mary Magdalene more than all the disciples and used to kiss her often on the mouth.”[3]

Ref: http://en.wikipedia.org/wiki/Gospel_of_Philip



திரு உமர் அவர்களே,

  • ஜீசஸ் அவர்களுடன் முறையே திருமணம் முடிக்காத மேரி மக்தேளேன், அவருடன் அனேக நேரங்களில் தனித்து இருந்தார்கள் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறர்கள்.
  • ஆண் சீடர்களை காட்டிலும் ஜீசஸ் உடன் மேரி மக்தேளேன் நெருக்கமாக இருந்தார் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறர்கள்.
  • ஜீசஸ் இன்னும் அதிகப்படியாக மேரி மக்தேளேன் அவர்களின் உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார் என்று கோச்பேல் ஆப் பிலிப் சாட்சி கூறுகிறது.
  • ஜீசஸ் சிலுவையில் இட நேரிடும் பொழுது மேரி மக்தேளேன் உடன் இருந்தார் என்று பைபிள் அறிவிக்கிறது.
  • ஜீசஸ் அவர்களை அடக்கம் செய்த பிறகு அவர் உடலை ஆசுவாச படுத்த / தேய்த்து விட (anoint) மேரி மக்தேளேன் சென்றார் என்று பைபிள் உறைகிறது.
  • ஜீசஸ் மீண்டும் உயிர்பித்து எழுந்ததை முதலில் அறிந்தவர் மேரி மக்தேளேன் என்று பைபிள் அறிவிக்கிறது.
  • ஜீசஸ் அவர்களை கண்டவுடன் பரவசம் அடைந்து, கட்டி அணைக்க மேரி மக்தேளேன் முற்பட்டதையும், அதை திரு ஜீசஸ் அவர்கள் தவிர்ததை பைபிள் அறிவிக்கிறது. அப்படி என்றால் இவர்களுக்கு இடையே என்ன உறவு இருந்தது என்பதை திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும்.


திரு உமர் அவர்களே, ஒரு இளம் பெண், உங்கள் தேவாலயத்தில் மதகுருவுடன் தனித்து இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தால், அவர்கள் உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தால் அது ஏற்க கூடியாதா? இதை ஏற்க நீங்கள் மூன் வருவீர்களா? இதை உங்கள் ஜீசஸ் செய்ததாக கிறிஸ்தவம் அறிவித்தால் அதை ஏற்க்க உங்களால் எப்படி சாத்தியம் ஆகிறது?


இவ்வாறு ஒரு கன்னி பெண்ணுடன் தனித்து இருப்பது தவறு என்பது, நீங்கள் இறைவனாக வணங்கும் ஜீசஸ் அவர்களுக்கு தெரியாதா? அல்லது இதை அறிந்து கொண்டே செய்ய அவர் துணிந்தாரா? அவர் இவ்வாறு அறிந்து கொண்டே தவறு செய்ய துணிந்த காரணத்தினாலே தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கண்டித்தாரா? இப்படி பட்டவர்களை தான் உங்கள் கட்டுரையில் “போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா? இவ்வாறு பாடல் வரிகளாக பாடுநிர்களா? அப்படியானால் உலகில் வாழ்ந்த திரு ஜீசஸ் அவர்களும் தூய்மை யானவர் இல்லை என்று நிங்களே சாட்சி குருகிறீர்கள் தானே?

Luke 18:18 Now a certain ruler asked him, “Good teacher, what must I do to inherit eternal life?” 18:19 Jesus said to him, “Why do you call me good? No one is good except God alone.



திரு உமர் அவர்களே, ஜீசஸ் மேரி மக்தேளேன்னை இடையே திருமணம் முடித்து இருந்தது என்ற வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், பைபிளின் வெளிபடுதுதல் ஜீசஸ் அவர்களுக்கு நடக்க விருக்கும் திருமணத்தை அறிவிக்கிறது, அப்படி என்றால் அவர் ஒன்றிக்கு மேல் மனைவிகளை கொண்டவர் தானே? அவரை பழிக்க முன் வருவீர்கள் தானே?

Revelation 19:7 Let us rejoice and exult and give him glory, because the wedding celebration of the Lamb has come, and his bride has made herself ready. 19:8 She was permitted to be dressed in bright, clean, fine linen” (for the fine linen is the righteous deeds of the saints). 19:9 Then the angel said to me, “Write the following: Blessed are those who are invited to the banquet at the wedding celebration of the Lamb!” He also said to me, “These are the true words of God.”



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் “நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்?” என்று வினாவி இருந்தீர், உங்களை பற்றி நிங்களே அறிவித்து கொண்ட கருத்து தானே இது? இந்த கருத்துக்கு உரியவர் நீங்கள் தானே?


திரு உமர் அவர்களுக்கு, இனியேனும் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தெளிவான ஆதாரத்தை எடுத்து கொடுக்க அவர் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) உதவுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்


--

--

1 comment:

Wanishaj said...
This comment has been removed by a blog administrator.