Tuesday, July 5, 2011

திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் 2


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் 2


வாசகர்களே திரு உமர் அவர்கள் தன் மூல கட்டுரையில் “உலக மகா தீவிரவாதி பின்லாடன் மரித்ததற்கு வருத்தம் தெரிவித்து இஸ்லாமியர்கள் அவருக்காக தொழுகை நடத்துகிறார்கள்” என்று இஸ்லாமியர்கள் செயல்பாட்டில் தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இஸ்லாமின் கொள்கை அடிப்படையில், இஸ்லாமை ஏற்று எந்த ஒரு நபரும் மரணிக்க நேரிட்டாலும், அவர் வாழ் நாளில் நல்லவரோ அல்லது கெட்டவரோ, அவருக்காக நல்லென்னத்துடன் இறைவனை தொழுது பிராத்தனை செய்து அவர் இறுதி சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் வழிமுறை. இவ்வாறே கெட்டவர்கள் மீதும், அவர்கள் இறப்புக்கு பின்பும் இஸ்லாம் தன் அன்பை வெளிபடுதுகிறது. ஆனால் அன்பை போதிப்பதாக பொய்யுரைக்கும் கிறிஸ்தவ அரசாங்கங்கள், ஒரு தனி மனிதனுக்கு உலகில் உரிய கடைசி தொழுகையை கூட தொழ விடாமல், அவனுக்கு தீவிரவாதி என முத்திரை இட்டு அவனை ஆழ்கடலில் எறிந்ததாக அறிவிக்கிறது. இன்னும் அதிகபடியாக கிறிஸ்தவ பிரதிநிதியான திரு உமர் அவர்கள் மரணித்த நபருக்கு இஸ்லாமியர்கள் பிராத்தனை செய்வதை கடிந்து கொள்கிறார். இது ஒன்றே போத வில்லையா, இஸ்லாம் தான் உலகுக்கு அன்பை போதிக்கும் மார்க்கம் என்பதை அறிய, இன்னும் கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவர்கள் அன்பை போதிக்க மறுக்கிறார்கள் என்பதை உணர???


யூதரின் ஜனாஸா (இறந்த உடல்) காக எழுந்து நின்ற நபி (ஸல்) அவர்கள்

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ்)


இதன் மைய கருத்து என்னவென்றால், ஒருவர் உயிருடன் இருக்கும்போது எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் இறந்தவுடன் அந்த உடல் இறைவனின் படைப்பாக மட்டுமே இருக்கிறது அந்த உடலுக்கு யூதன் கிறிஸ்தவன் என்ற வேறுபாடு கிடையாது. ஆகவே இறைவனின் படைப்புக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அவர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்திருந்தாலும் செலுத்தியே ஆகவேண்டும்.

ஒரு பக்கம் தீவிரவாதிகளுக்க பிரார்த்தனை செய்யுங்கள் என போலியாக ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் திரு உமர் அவர்கள், இன்னொரு பக்கம் ஒருவர் மரணிததர்க்கு வருத்தம் தெரிவிக்கும் இஸ்லாமியர்களை சாடுகிறார். இப்படி பட்ட நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை சாடுவதன் மூலம் உங்களுடைய கீழ்த்தனமான எண்ணமே வெளிபடுகிறது. என்ன மனிதர் ஐயா நீர்???

இதற்கு முன்னரே, “ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் “ என்ற செய்தியை திரு உமர் அவர்கள் தன் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த செய்தியுடன் ஒசாமா பின்லாடனின் புகை படத்தையும் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட செய்தியை போல் அவர் வெளியிட்ட புகைப்படமும் சந்தேகத்திற்கு உரியது. இதோ திரு உமர் அவர்கள் வெளியிட்ட புகைப்படம்:



திரு உமர் அவர்கள் வெளியிட்ட மேற்கண்ட புகைப்படம் சந்தேகத்திற்கு உரியது என்று அறிவித்தோம். ஏனெனில் உசாமா வலது கைகளில் கடிகாரம் அணியும் பழக்கம் உடையவர் என்று அமெரிக்க CIA உளவு துறை இணையதளம் அறிவிக்கிறது. ஆனால் திரு உமர் அவர்கள் வெளியிட்ட புகை படத்தில் அவர் இடது கையில் கடிகாரம் அணித்து இருப்பதாக சித்தரிக்க பட்டுள்ளது. இன்னும் அதிகபடியாக அந்த புகைப்படத்தில் உசாமாவின் பின் புறத்தில் அரபி எழுத்துகள் ஏனைய மொழிகளை போல் இடம் இருந்து வழம் எழுதப்பட்டுல்லதாக சித்தரிக்க பட்டுள்ளது ஆனால் உண்மையில் அரபி எழுத்துகள் வலம் இருந்து இடம் எழுத பெறுபவை. இன்னும் அதிகபடியாக திரு உமர் அவர்கள் ஒசாமா பின்லாடன் கொள்ளப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டு இருந்தார். ஆனால் அமெரிக்க FBI, உசாமா பின்லாடன் கொள்ளப்பட்டார் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரி திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் ஒசாமா என்பதா அல்லது அமெரிக்க FBI அறிவிப்பது போல் உசாமா என்பதா? எனவே இந்த புகைப்படமும் அதனுடன் சேர்ந்த செய்தியும் சந்தேகத்திற்கு உரியதாக நாம் அறிவிக்க விரும்புகிறோம். இன்னும் அமெரிக்கா அறிவிக்கும் உசாமா கொலையுண்ட நிகழ்வுகளை அறியும் பொழுது உலகில் இதுவரை நடந்தேராதா அதிசயத்தை அமெரிக்க கிறிஸ்தவ அரசாங்கம் நடத்தேற்றியத்தை நம்மால் உணற முடிகிறது உதாரணமாக:

  • நள்ளிரவில் நான்கு அமெரிக்க வான் ஊர்திகள் அண்டை நாடான பாகிஸ்தான் தலை நகரம் அருகில் அமைத்துள்ள, இன்னும் அதிகபடியாக மூன்று பாகிஸ்தான் ராணுவ தளங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தாக்குதல் நடத்தி உசாமா பின் லாடனை கொன்று உடலை எடுத்து சென்றதாக அறிவிக்கிறது. இந்த மொத்த நிகழ்வும் வெறும் 38 நிமிடங்களுக்குள் முடிக்கபெற்றது என்று அறிவிக்கிறது. Navy SEAL வீரர்கள் கடல் கடந்து அண்டை நாட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தி 38 நிமிடங்கள்களுக்குள் தாக்குதல்களை முடித்து திரும்பினார்கள் என்பது உலக அதிசியம் தானே?

  • தலை நகர் அருகாமையில் உள்ள அப்போடாபாத் என்னும் இடத்தில் 4,00,000 மக்கள் குடியிருக்கும் பகுதியில் ராணுவ தாக்குதல்கள் நள்ளிரவில் நடத்தபடுகிறது. ஆனால் அவற்றில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் இரவில் வானுர்தி ஒலியை கேட்டதாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அப்படியானால் இது மிக பெரிய உலக அதிசியம் தானே?


உலக அதிசியங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் கீழே கோடிட படும் நிகழ்வுகளுக்கு சாத்திய கூறுகளை ஆராய்வோம்:

  • திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் உலகமே கண்டு அஞ்சும் ஒரு தீவிரவாதி தன் வீட்டின் கூறை மீது நள்ளிரவில் நான்கு அமெரிக்க வானூர்திகள் பறப்பதை கண்டு சுதாரிக்காமல் இருக்கிறார்.

  • ஒரு அமெரிக்க ராணுவ வானூர்தி தன் வீட்டின் மதில் சுவற்றில் விழுந்து வெடித்து நொறுங்குகிறது அப்பொழுதும் சுதரிக்காமல் இருக்கிறார்.

  • தன் வீட்டின் மதில் சுவர்கள் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்க படுகிறது அப்பொழுதும், சுதரிக்காமல் இருக்கிறார்.

  • தனக்கு செய்தி எடுத்துவரும் நபர் தன் வீட்டினுள் அமைத்துள்ள விருந்தினர் அறையில் சுட்டு கொள்ள படுகிறார், அப்பொழுதும் சுதரிக்காமல் இருக்கிறார்.

  • ஒரு டஜன் பெண்கள் குழந்தைகள் வீட்டின் தரை தளத்தில் துப்பாக்கி சூட்டினால் கொள்ளப்படுகிறார்கள்,அப்பொழுதும் சுதரிக்காமல் இருக்கிறார்.

  • தன் மகன் முதல் தளத்தில் துப்பாக்கி முனையில் கொள்ள படுகிறார், அப்பொழுது தான் முதல் முறையாக முன்றாவது தளத்தில் இருந்து உசாமா பின் லாடன் எட்டி பார்த்தார் என்று அமெரிக்க CIA அறிவிக்கிறது. அந்த நேரத்தில் உசாமா தலைப்பாகை அணிந்து இருந்ததால் ராணுவ வீரர்களால் அவர் தான் உசாமா என்பதை ஊர்ஜித படுத்த முடியவில்லை என்று அமெரிக்க உயர்மட்டம் அறிவிக்கிறது. (நள்ளிரவில் உறக்கத்தில் இருந்து துப்பாக்கி வெடி ஓசையை கேட்டு எழுந்து வரும் ஒரு உலக மகா தீவிரவாதிக்கு தலைப்பாகு கட்டி கொண்டு வெளி வர நேரம் இருந்ததை என்னும் பொழுது மிக ஆச்சரியமாக இருக்கிறது).

  • பிறகு உசாமா தன் படுக்கை அரைக்கு சென்றதாகவும் ராணுவம் பின் தொடர்ந்ததாகவும், அங்கு பர்தா அணிந்த ஒரு பெண்ணுக்கு பின் உசாமா நிராயுதபானியாக நின்றதாகவும் (நள்ளிரவில் படுக்கை அறையில் ஒரு பெண் பர்தா அணிந்து இருந்தால் என்பது வியப்பான செய்தி தானே?), அந்த பெண்ணின் கால்களில் சுட்டு விழ்த்திய பிறகு உசாமா மார்பிலும் நெற்றியிலும் சுடப்பட்டு கொள்ள பெற்றார் என்று அமெரிக்க அதிகார துறை அறிவிக்கிறது. திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் உலக மகா திவிரவாதி, எந்நேரமும் தன்னுடன் ஒரு இயந்திரா துப்பாக்கியை கொண்டிருந்தவர், அமெரிக்க தாக்குதலின் பொழுது நிராயுதபானியாக நின்றது ஏன்?

  • அமெரிக்கர்களுடன் சேர்ந்து ரஷ்யர்களிடம் இருந்து ஆப்கானனை விடுவிக்கும் யுத்தத்தில் போர் கலத்தில் ஆயுதம் ஏந்தி முன் நின்று தரை வழி யுத்தம் செய்த ஒரு நபர், ஒரு பெண்ணுக்கு பின் மறைந்து நின்றார் என்ற செய்தியை நம்ப முடிகிறதா?


உசாமாவின் மரணத்தை அமெரிக்க எவ்வாறு ஊர்ஜிதப் படுத்தியது என்று பார்போம்:

  • முதல் வழிமுறை: உசாமா உயரமானவர் என்பதால் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த ஆறு அடி நிறைந்த ஒரு வீரரை உசமாவின் பிரேதத்திர்க்கு பக்கத்தில் படுக்க வைத்து அளக்கிரர்கள். உசமாவின் பிரேதம் அமெரிக்க வீரரின் உயரத்தை காட்டிலும் அதிகமாக இருந்தமையால் அது உசாமா தான் என்று ஊர்ஜிதப் படுத்துகிறார்கள்.

  • இரண்டாவது வழிமுறை: தலையில் குண்டடி பட்டு சிதைந்த நிலையில் உள்ள உசாமாவின் புகை படத்தை அவரது முந்தைய புகை படத்துடன் ஒப்பிட்டு பார்த்து அவர் உசாமா தான் என்று ஊர்ஜிதப் படுத்துகிறார்கள்.

  • கடைசி வழிமுறை: உசாமாவின் உடல் மூல கூறுகளை (DNA) எடுத்து அமெரிக்காவில் வாழும் அவரது தூரத்து உறவினர்கள் உடல் மூல கூறுகள் (DNA) உடன் ஒப்பிட்டு பார்கிறார்கள். அவை நூறு சதவீதம் பொருந்தாத பட்சத்திலும் ஓர் அளவு பொருந்தும் நிலையில் இறந்த நபர் தான் உசாமா என்று முத்திரை இடுகிறார்கள்.


கையில் துப்பாக்கி ஏந்திய சதாம் ஹுசைனை பிடித்து கூண்டில் ஏற்றி படுகொலை செய்த அமெரிக்க ராணுவம் நிராய்தபானியாக நின்ற உசாமாவை கொள்ள என்ன காரணம்? கொலைக்கு கொலை தான் தண்டனையா? உசாமா தீவிரவாதம் செய்தார் என்று வைத்து கொண்டாலும் அமெரிக்கர்கள் அண்டை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சமூட்டும் வகையில் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது தீவிரவாதம் இல்லையா?

பாகிஸ்தான் முன்நாள் முதல்வர் முஷரப் கொலை குற்றவாளி, பெனசிர் பூட்டோ வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளி, இப்பொழுது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளார். அவரை சிறை பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் அனுமதி இல்லாமல் இங்கிலாந்து நாட்டினுள் நுழைந்தால் அமெரிக்கர்கள் வரவேற்பார்களா? இது முறையா? ஒரு மனிதனின் ஈமச்சடங்கை கூட செய்ய விடாமல் அவனை கடலில் தூக்கி எறிய அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? குறைந்த பட்சம் அவர்தான் உசாமா என்பதற்க்கு புகை பட ஆதாரத்தை அமெரிக்க கிறிஸ்தவ அரசாங்கள் வெளியிட வேண்டாமா?

ஊடகங்கள் வெளியிட்ட ஒசாமாவின் புகைப்படம்:



ஆனால் அது போலியானது என்று நிரூபிக்க பெற்றது:


மேலும் விவரங்களுக்கு




கொள்ள பட்டது உசாமா தானா அல்லது இதற்கு முன்னரே அவர் இறந்து இருக்க கூடுமா?


இதற்கு முன்னரே உசாமா தோரா போரா யுத்தத்தில் இடது கை மற்றும் கண்களை இழந்தார் என்று அமெரிக்க படைவீரர்கள் அறிவித்தார்கள். 54 வயது நிரம்பிய முதியவர், கடந்த இருப்பது ஆண்டுகளாக சிறுநீரக நோயினால் பாதிக்க பட்டவர். ஒரு ஆப்பிள் பழத்தை ஐந்து பேர் உணவாக பகிர்ந்து உன்னும் நிலையில், இத்தனை ஆண்டு காலம் பிழைத்து இருக்க கூடுமா? முடியும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் நினைத்தால் எதுவும் முடியும்.. உசாமா 2001 மரணித்து இருக்க வாய்ப்புகளை விவரிக்கும் இணைய தளம்



இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம். திரு உமர் அவர்களே ஒசாமாவின் புகைப்படம் என்று நீங்கள் வெளியிடுவது எந்த உசமாவின் புகைப்படம் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா? ஏன்னெனில் இவர் தான் உசாமா என்று அதிக படியாக ஒரே முக சாயலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களின் புகை படங்களை அமெரிக்க வெளியிட்டு உள்ளது. உதாரணமாக:




உசாமா பின் லாடன் தான் அமெரிக்க தாக்குதல்களை செய்தார் என்பதற்க்கு எதாவது தெளிவான ஆதாரம் திரு உமர் அவர்களிடம் உள்ளதா? அமெரிக்க வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை கோடிட போகிறாரா? அந்த வீடியோவை நீங்கள் இன்னும் ஒரு முறை ஆய்வு செய்யும் படி உங்கள் வேண்டி கேட்டு கொள்கிறோம்:

  • உசாமாவின் பழைய புகை படங்களுடன் அந்த வீடியோ சித்தரிக்கும் நபரை ஒத்து பார்ப்போமேயானால், அவரின் மூக்கின் அமைப்பு மற்றும் தடைகளில் உள்ள வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.

  • இன்னும் உசாமா இடது கை பழக்கம் உடையவர் என்று அமெரிக்க FBI உளவு நிறுவனம் அறிவிக்கிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர் வலது கையில் எழுதுவதாக சித்தரிக்கபட்டுள்ளது.

Bin Laden is the leader of a terrorist organization known as Al-Qaeda, "The Base". He is left-handed and walks with a cane.
http://www.fbi.gov/mostwant/topten/fugitives/laden.htm


  • இஸ்லாமில் ஆண்கள் தங்க ஆபரணங்கள் அணிவது ஹராமாக்கபட்டது, ஆனால் இஸ்லாமிய தீவிரவாதி என்று முத்திரை இடப்பட்ட உசாமா தங்க மோதிரம் அணித்து இருப்பதாக அந்த வீடியோ சித்தரிக்கிறது. இது நம்பகூடியதா ?

  • அந்த வீடியோவில் உசாமா இரண்டு தீவிரவாதிகளை புகழ்வதாக (Wail M. Alshehri and Salem Alhazmi) சித்தரிக்கபட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்னும் அமெரிக்க அரசாங்கத்தால் குற்றம் சுமத்த பட்ட ஏனைய ஒன்பது தீவிரவாதிகளும் உயுருடனே இருகிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆயிற்று. ஒரு தலைவன் தன் கொள்கைக்காக உயிர் துறந்த தீவிரவாதிகளை பாராட்டாமல் உயுருடன் இருக்கும் தீவிரவாதிகளை பாராட்டுவது சாத்தியமா?

  • அமெரிக்க FBI நிறுவனத்திற்கு ஆறு மதங்களுக்கு முன் தெரிவிக்க பெற்ற உசாமாவின் சதி திட்டம் உசாமவுக்கு ஐந்து நாட்களுக்கு முன் தான் தெரிய வந்ததாம். அந்த வீடியோவில் உசாமா வாக்குமூலம் அளிப்பதாக சித்தரிக்க பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் ஆயிற்று? தன் படையை சேர்ந்த தீவிரவாதிகள் உலகெங்கும் பயிற்சி பெற்று நிகழ்த்தவிருக்கும் பெறும் தாக்குதல் தனக்கு ஐந்து நாட்களுக்கு முன் தான் தெரிய வந்தது என்று அந்த அமைப்பின் தலைவன் அறிவிப்பது நகைப்புக்கு உரிய விஷயம் தானே?

  • இதை போன்றே பல போலி வீடியோகளை அமெரிக்க வெளியிட்டு வருகிறது. அவற்றில் வரும் உசாமாவின் தோற்றத்தை பார்க்கும் பொழுது, உலகமே கண்டு அஞ்சும் உசாமா முக போலிவு அறுவை சிகிச்சை செய்து இருப்பரோ என்று தோன்றுகிறது. இன்னும் சில வீடியோ களில் அவர் தன் தாடை முடிகளுக்கு கருநிற சாயம்மிட்டு அழகு படுத்தி இருப்பதை நம்மால் காண முடிகிறது. முடிகளுக்கு கரு நிற சாயமிடுவது இஸ்லாமில் தவறு என்பதை சராசரி இஸ்லாமியனே அறிந்து இருக்கும் பொழுது இஸ்லாமிய தீவிரவாதியாக முத்திரை இடப்பட்ட உசாமாவுக்கு இது தெரியாது போலும்.

அமெரிக்க தீவிரவாத தாக்குதல் அமெரிக்க அரசாங்கத்தால் நடந்தேற்றபட்ட நாடகம் என்று பல அமெரிக்கர்களே ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கும் நிலையில், கண் இருந்தும் குருடர்களாக காத்திருந்தும் செவிடர்களாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் போல், உலகில் பலர் அமெரிக்க அரசாங்கம் மற்றும் கிறிஸ்தவ ஊடகங்கள் அறிவிக்கும் பொய் பிரசாரத்தை நம்புகிறார்கள், இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?







நாங்கள் இவ்வாறு கட்டுரையை வெளியிட்டவுடன் தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மாயயை, திரு உமர் அவர்கள் எழுப்ப முயற்சிக்கலாம். நாங்கள் தீவிரவாதத்தை எந்நிலையிலும் ஆதரிபவர்கள் இல்லை. தீவிரவாதம் எந்த நிலையில் இருந்தாலும் எந்த முகத்திரையில் அமைந்து இருந்தாலும் அதை எதிர்கவே நாங்கள் விரும்புகிறோம், இந்த எங்கள் நிலைபாட்டை வெளிபடுதவே இந்த கட்டுரையை நாங்கள் வெளியிட்டு உள்ளோம், ஏனெனில் அண்டை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கும் வகையில் தங்களுடைய படை வீரர்களை அனுமதி இன்றி அண்டை நாடுகளுக்குள் அனுப்புவது ஒரு வித தீவிரவாதமே. இன்னும் நிராயுடபானியான ஒரு முதியவரை தீவிரவாதி என்று முத்திரை இட்டு அவரை கொன்று கடலில் வீசியதும் ஒரு வகை தீவிரவாதமே. அவரை முறையே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க ஆதாரங்களை நிரூபித்து பின் அவருக்கு தண்டனை வளங்குவதே சிறந்தது அன்றி இவ்வாறு படுகொலைகள் செய்ய படுவது முறை அல்ல. வலியவன் சொல்வது எல்லாம் சட்டம் என்பது போல் அமெரிக்க கிறிஸ்தவ இராணுவத்தின் நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க கூடாது. அப்படி ஆதரிக்க நேரிட்டால் இன்று பாகிஸ்தான் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அமெரிக்க ராணுவம் நாளை வேறு ஒரு திவிரவதியின் முகவரியில் இந்திய நாட்டின் அமைதிக்கும், தேசிய பாதுகாப்பிற்க்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும். எனவே இது வன்மையாக கண்டிக்க வேண்டிய கிறிஸ்தவ தீவிர வாதம் என்பதை உங்கள் முன் தெளிவாக்க நாங்கள் விரும்புகிறோம்.


இறைவன் நாடினால் பாகம் மூன்றில் சந்திப்போம், அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்



No comments: