Tuesday, April 5, 2011

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு ...


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அன்பை போதிப்பவர் என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்றும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.


திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் 2 இப்பொழுது வெளியிடுகிறோம்.


திரு உமர் அவர்களே, உலகில் உள்ள எல்லா கனி வகைகளும் பெறும் பாலும், அதன் காய் காய்க்கும் தவணை மற்றும் பருவ நிலைக்கு ஒப்பவே மாறுபடும். ஒரு மரம் அதற்கு உரிய தவணை மற்றும் பருவ நிலை அடையும் பொழுதே காய் காய்கிறது. இந்த தவணையை விடுத்து ஏனைய பருவ காலங்களில் அவை காய் காய்ப்பது இல்லை என்பது மானிடர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இதற்கு மாறாக நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், ஒரு அத்தி பழ மரம், அதன் பருவ நிலைக்கு ஏற்பவே காய்க்கும் என்பதை அறியாமல், அத்தி பழம் காய்க்கும் பருவ காலம் அல்லாத காலத்தில், தன் பசிக்கும் புசிக்க அத்தி மரத்தில் பழம் காய்க்காத காரணத்தினால், அதை சபித்து அழித்ததாக பைபிள் அறிவிக்கும் தெளிவான பைபிள் வசனம்:

Matthew 21:18 Now early in the morning, as he returned to the city, he was hungry. 21:19 After noticing a fig tree by the road he went to it, but found nothing on it except leaves. He said to it, “Never again will there be fruit from you!” And the fig tree withered at once



திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:

1

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக வணங்கும் ஏசுவுக்கு மற்ற சாதாரண மனிதர்களை போல பசி எடுத்தது ஏன்? மற்றவரின் நோய்களை குண படுத்த முடிந்த ஏசுவுக்கு தன் பசியை உணவின்றி தீர்க்க முடியாதது ஏன்?


2

திரு உமர் அவர்களே, மற்றவரின் நோய்களை கண் இமைக்கும் நேரத்தில் குணப்படுத்த முடிந்த ஏசுவுக்கு அந்த மரத்தின் கனிகளை தானாக உண்டுபண்ண செய்ய முடியாதது ஏன்?


3

திரு உமர் அவர்களே, தானாகவே வளர்ந்து, தன் பருவ கால தவணைகளில் காய் கனிந்து, எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கு உணவளித்து கொண்டு இருந்த ஒரு அத்தி பழ மரத்தை, தனக்கு பசிக்கும் வேளையில் பழம் காய்க்காத காரணத்தினால், சாபமிட்டு அழித்த திரு ஏசு அவர்களின் ஈவு இரக்கமற்ற இந்த செயலை, எதை அடிப்படையாக கொண்டு ஏற்க நீங்கள் முன் வருகிறீர்கள் என்று எங்களுக்கு கொஞ்சம் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க முடியுமா? இது ஒன்றே போத வில்லையா அவர் இறைவன் அல்ல ஒரு இறைத்தூதர் என்பதை உணர?


4

திரு உமர் அவர்களே, உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், திரு ஏசு அவர்கள் இறைவன் என்றால், எந்த தவறும் இழைக்காத ஒரு அத்தி மரத்தை சாபமிட்டு அளிப்பது ஒரு நல்ல இறைவனுக்கு அழகா?


5

திரு உமர் அவர்களே, மனிதர்களை கொள்வதை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்வீர்களா? ஏன் மரங்களுக்கு வலிகளை உணரும் தன்மை உள்ளது என்பது நீங்கள் அறியாததா?

http://www.department13designs.com/vegan.html

http://en.wikipedia.org/wiki/Plant_perception_(paranormal)


6

திரு உமர் அவர்களே, ஒரு மரத்தை நட்டு அதை கனிய செய்வதில் உள்ள சிரமத்தை அறிய வேண்டும் என்றால் அதை நட்டு வைத்து பாதுகாத்து வளர்த்த விவசாயி இடம் சென்று வினவினாலே போதும். இன்னும் அதிக படியாக விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மரங்களை, தாங்கள் ஈன்றேடுத்த பிள்ளைகளை காட்டிலும் பரிவன்புடன் வளர்ப்பார்கள். அப்படி கடின உழைப்பின் பயனாக வளர்ந்து நிற்கும் ஒரு மரத்தை தக்க காரணம் இன்றி அளிக்க நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது?


7

திரு உமர் அவர்களே, உங்கள் ஏசு அவர்களின் கோபத்திற்கு ஆளான ஒரு அப்பாவி மரத்தை பற்றி மட்டுமே இந்த கட்டுரையில் விவரித்துள்ளோம். இவ்வாறு கணக்கில் வராமல் அவர் கோபத்திற்கு ஆளான இன்னும் எத்தனை மரங்கள் உள்ளது என்று எங்களுக்கு கணக்கெடுத்து தருமாறு கிறிஸ்தவ அறிஞ்சாரக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் உங்களிடம், இந்த கட்டுரை மூலம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.




திரு உமர் அவர்களே, இன்றைய உலக சூழ்நிலையில் மர வளர்ப்பின் அத்தியாவசியத்தை நீங்கள் நன்கு அறிந்திர்பீர்கள் என்று நம்புகிறோம். இப்படி மனிதனே மரங்களின் அத்தியாவசியத்தை உணர்த்து மரவளர்ப்பு திட்டங்களை வகுக்கும் நிலையில், நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், தொலை தூற நோக்கத்தோடு மர வளர்ப்பை போற்றி அல்லவா இருக்க வேண்டும்? இதற்க்கு மாறாக அவரே இவ்வாறு மரங்களை அழிக்க முனைந்தது ஏன்?


திரு உமர் அவர்களே, தக்க காரணம் அன்றி, இது போன்று பொது உடமைகளை, மரங்களை அழிப்பவர்களை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது (அல் குர்ஆன் 2:204-206), இவர்களை பசாது செய்பவர்கள் என்று அழைக்கிறது. இன்னும் அதிக படியாக அன்னல் நபி திரு முஹம்மத் (ஸல்) அவர்கள், மர வளர்ப்பை போற்றியுள்ளார்கள், இன்னும் அதிகபடியாக, மர வளர்ப்பு என்பது முடிவில்லாத தான தர்மம் செய்வதற்கு இணையான கூலியை பெற்று தரும் என்று பரிந்துரைத்து உள்ளார்கள்.

Bukhari 2320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).

Volume :2 Book :41

Sahih Muslim Book 010, Number 3764:

Jabir (Allah be pleased with him) reported Allah's Messenger (may peace be upon him) as saying: Never a Muslim plants a tree, but he has the reward of charity for him, for what is eaten out of that is charity; what is stolen out of that, what the beasts eat out of that, what the birds eat out of that is charity for him. (In short) none incurs a lose to him but it becomes a charity on his part.



திரு உமர் அவர்களே, மரம் வளர்ப்பது அத்தியாவசிய தேவையாகிய இன்றைய சூழ்நிலையில், செழித்து வளர்ந்த மரத்தை தன் சொந்த விருப்பதிற்காக சாபமிட்டு அழித்த பைபிளின் திரு ஏசுவை காட்டிலும், மரவளர்பை ஒரு புண்ணியமாக போதித்து அதன் மூலம் மக்களை உலகிற்கு நன்மை செய்ய தூண்டிய திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், மேன்மையானவர் என்பது இந்த கட்டுரை மூலம் தெளிவாகி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்

No comments: