Tuesday, January 25, 2011

கிறிஸ்தவர்கள் முகத்தில் கரியை பூசிய உமர்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்


பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



கிறிஸ்தவர்கள் முகத்தில் கரியை பூசிய உமர்


தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக இஸ்லாமியர்களுக்கு ஏதிராக பொய் பிரசாரம் வரைந்த, திரு உமர் அவர்களுக்கு விளக்கம் அளித்து விட்டு, பைபிளில் இருந்து தெளிவான பைபிள் வசனங்களை, நாம் கேள்விகளாக எடுத்து வைப்பதை பொறுக்காமல், சராசரி கிறிஸ்தவர்களே பொங்கி எழும் பொழுது, நம்மிடம் கேள்வி கணைகளை தொடுக்கும் பொழுது, கிறிஸ்தவ அறிஞர் என்று தன்னை காட்டி கொள்ள முயலும் திரு உமர் அவர்கள், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்த திரு உமர் அவர்கள், இத்தனை கால தாமதத்திற்கு பிறகும், இந்த கட்டுரைகளை ஆமோதித்து எதிர் வாதம் செய்யாமல், பைபிளில் இருந்து தெளிவான விளக்கங்கள் தராமல், நாங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் அனைத்தும் சத்தியம் என்று சாட்சி கூறும் வண்ணம், இந்த தலைப்பை மறந்து/மறைத்து வேறு கருத்துகளை வெளியிடும் வண்ணம், புதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து உள்ளார். இதன் மூலம் “அண்ணன் உமர் கண்டிப்பாக தெளிவான ஆதாரத்துடன், கடுமையான எதிர் வாதத்தை முன் வைப்பார்” என்ற நம்பிக்கையில் அவர் தளம் மீது விழிவைத்து காத்திருந்த கிறிஸ்தவ நண்பர்கள் அனைவர் முகத்திலும் திரு உமர் அவர்கள் கரியை பூசியுள்ளார்.


அத்துடன் நின்றுவிடாமல் ரவுண்ட் கட்டி அடிக்கப்போவதாக வீர வசனம் பேசியவர் இன்று, ஒரு பக்கம் நாம், இன்னொரு பக்கம் அவர்களது தளங்களிலேயே கேள்வி கேட்கும் வாசகர்கள், மற்றும் பைபிளின் விரசங்கள் வேட்ட வெளிச்சமாகும் இணையதளங்கள், என ரவுண்டு கட்டி அடிவாங்குறது ஈஸா-உமர் மட்டும் அல்ல, அவரது பொய்யான வாதத்தினால் கிறிஸ்தவமும் சேர்ந்தே கேவலப்பட்டு வருகிறது.


தமிழில் இப்படியாக சொல்வார்கள் “தலை குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று. அதை போல இந்த தலைப்பில் இதற்கு மேல் எழுத வேறேதும் ஆதாரம் (சரத்து) இல்லாத நிலையில் வேறு வழி இல்லாமல் சாக்கு போக்கு சொல்லி, சரத்து இல்லாத பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.


குறைந்த பட்சம் நாங்கள் எழுதிய பைபிள் வசனங்களுக்காவது பைபிள்ளில் இருந்து தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு தெரிவிப்பார் என்று கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கும் தெளிவான ஆதாரம் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்காதன் மூலம், நாங்கள் பைபிளை பற்றி சொன்ன கருத்துக்கள் சத்தியம் என சாட்சி கூறியுள்ளீர். இப்படி உங்களை கிறிஸ்தவத்தின் பிரதிநிதியாக நம்பி, அண்ணன் அண்ணன் என, நீங்கள் சொல்வதெல்லாம் சரி என நம்பி, பின்தொடர்ந்த ஒன்றுமறியாத கிறிஸ்தவர்களை கிறிஸ்தவத்தின் பெயராலே ஏமாற்றி விட்டீரே உமர் அவர்களே!!


மேரியின் (மரியம்) கன்னித்தன்மையை சந்தேகிக்கும் உமர்

ஒரு பெண், மற்றவனின் மனைவியாக இருக்கும்பொது, அவளுடைய கனவில் இன்னொரு ஆண் பற்றிய கனவை கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?” என கேள்வி கேட்டவர், “ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு (மேரி) குழந்தையை கொடுத்த பைபிளின் இறைவன்” எப்படி பட்டவன் என்பதை விளக்க மறுக்கிறார்? அத்துடன் நின்றுவிடாமல் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கனவில் வந்து மேரியை மணந்துகொள்ள வற்புறுத்தியதன் மூலம், அவனுக்கு சம்பந்தம் இல்லாத குழந்தைக்கு தந்தையாக இருக்க பணித்த பைபிளின் கடவுள் எப்படிபட்டவன் என்பதை விளக்க மறுக்கிறார்???


இப்படி உங்கள் உடன்பிறப்புக்கள், ஒரு குழந்தையுடன் வந்து இது கடவுளின் குழந்தை, நான் கன்னித்தன்மை இழக்கவில்லை என்று முன்பின் தெரியாத மனிதரிடம் சென்று, வேண்டுமென்றால் கன்னித்தன்மையை சோதித்துப்பார் என்றால்? கடவுள் கனவில் வந்து இந்த குழந்தையை பற்றி கூறினார் அப்படியே குழந்தை உண்டாகிவிட்டது!!! என்றுறைத்தால்? ஆம் இது கடவுளின் குழந்தை என்று ஏற்றுக் கொள்வீர்கள் போலும்!!! இதை கேட்டு சிரிப்பதை தவிர வேறன்ன செய்வது?


பொல்லாங்கு செய்பவனின் உதாரணம் திரு உமர் :

  • ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு திரைக்கு பின் மறைந்துகொண்டு அடுத்தவர் மார்கத்தை பழிப்பவர்.
  • தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல், தன் வார்த்தை வல்லமையை அனைவரும் நம்பவேண்டும் என்று வேண்டுபவர்.
  • எடுத்து வைக்கும் ஆதாரம் எதையோ போதிக்க, அதற்கு முரணான தன்னுடைய கருத்தை திணிப்பவர்.
  • அடுத்தவர் கட்டுரையை மொழி பெயர்கிரேன் என்ற போர்வையில், இடை சொருகல்கள் செய்பவர்.
  • எழுத்து விவாதத்திற்க்கு அழைப்பு விடுத்துவிட்டு வாதங்களை காலதாமதம் செய்பவர்.
  • “தெளிவான ஆதாரம் கொண்டு எதிர் வாதம் வரைய நேரம் இல்லை” என்று தெரிவித்துவிட்டு ஒரே நாளில் அடுத்தவரின் மூன்று கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுபவர்.
  • “தெளிவான ஆதாரம் கொண்டு எதிர் வாதம் வரைய நேரம் இல்லை” என்று அறிவித்துவிட்டு, வேறு இணையதளங்களில் நமது கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்காமல், வெறுமனே கேள்விகளை தொடுப்பது முலம் முதுகில் குத்த முயல்பவர்.
  • தங்களுக்கு தெளிவான ஆதாரத்தை எடுத்து தர தாங்கள் இறைவன் முன்வராத காரணத்தினால், தலைப்பை மாற்றி தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்பவர்.
  • தலைப்பை மாற்றியும் அதிலும் வெற்றி கொள்ள முடியாத நிலையில், காலதாமதப்படுத்தி வேறு கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்.
  • தோல்வியுற்ற பொய்யான வாதங்களை நீக்காமல், வேறு இணையதளங்களில் பிரசுரிப்பவர்.
  • “தெளிவான ஆதாரம் தாரும்” என்று வினவும் கிறிஸ்தவ நண்பர்களை, நம்பிக்கையின் பெயரில் அமைதி படுத்துபவர், அவர்கள் கருத்துகளை வெளியாகாமல் தவிர்ப்பவர்.
  • எதிர் வாதம் செய்வோர் அறிவிக்காத கருத்தை அவர்கள் அறிவித்ததாக பிரகண்டனம் செய்பவர்.
  • பொது இடங்களில் கட்டுரை வரையும் வரைமுறையை அறியாமல், கொச்சையான வார்த்தைகளை மையப்படுத்தி, கட்டுரை வரைவது முலம் கிறிஸ்தவத்தை சேர்த்தே இழிவு செய்பவர்.
  • கிறிஸ்தவ பெயரில் கட்டுரை வரைகிறேன் என்ற போர்வையில் கிறிஸ்தவர்களை சேர்த்தே இழிவு செய்பவர்.


இன்னும் இப்படி என்னற்றவற்றை திரு உமர் அவர்கள் குறித்து நீங்கள் அறிந்து இருக்கலாம், அப்படியானால் திரு உமர் அவர்கள் தங்களின் வலைத்தளத்தில் கோடிட்டுள்ள “பொல்லாங்கு செய்கிற” வசனம் அவரை தானே குறிக்கிறது? ஒளியிடம் வர மறுப்பவர், நேரடி விவாதத்திற்கு வர மறுப்பவர் திரு உமர் தானே?

John 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவன்க்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

John 3:20 For everyone who does evil deeds hates the light and does not come to the light, so that their deeds will not be exposed. 3:21 But the one who practices the truth comes to the light, so that it may be plainly evident that his deeds have been done in God.


கிறிஸ்தவர்களே இனியேனும் சிந்தியுங்கள், திரு உமர் உண்மையாளராக இருந்தால் இப்படி உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருப்பாரா? ஒரு சராசரி கிறிஸ்தவனுக்கு உரிய ரோஷம் கூட தனக்கு இல்லை என்று நிருபிக்கும் திரு உமர் அவர்களா உங்கள் பிரதிநிதி? கொஞ்சம் சிந்தியுங்கள்...


கேள்வி பதில்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்


பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

கேள்வி:

ஷப்பியாவைக் குறித்த சர்ச்சை முன்னுரை தமிழ்க் கிறிஸ்டியன்ஸ் தளத்திற்கு முன்பைப் போல் வந்து போக முடியவில்லை. அப்படியே வந்து போனாலும், எனக்கு ஆர்வத்தைத் தூண்டும் சில கட்டுரைகளை மட்டும் படித்து விட்டுச் செல்வேன். அந்த வகையில்தான் முகமதுவைக் காப்பாற்ற ஷஃப்பியாவைக் கேவலப்படுத்தும் இஸ்லாமியர்கள் என்ற இந்தக் கட்டுரை அமைந்தது. முதன் முறையாக வாசிக்கும் போது, ஆய்வூக்கம் இல்லாமல் தகவலை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு மட்டும்தான் வாசித்துச் சென்றேன். பின்னர், இக்கட்டுரைக்கு எதிர்வாதம் தீட்டப்பட்டுள்ளதை அறிந்து ஈஸாஆ குர்ஆனில் இடம் பெற்ற கட்டுரையையையும் வாசித்தேன். இரண்டு தரப்பு வாதமும் மெத்த கனமாக இருப்பதைக் கண்டேன். இன்னும் ஆழமாகப் பாக்கும் போது, சகோ. உமரின் கட்டுரையில் இஸ்லாத்தைக் குறித்த வெறுப்புணர்ச்சி வெளிப்படுகிறது. இப்போது ஈஸாஆ குர்ஆன் தளத்தில் தனிநபர் தாக்குதல் இல்லாமல் எழுதப்பட்டிருப்பது பாராட்டப் படவேண்டிய விஷயம். ஆனாலும், அவர்கள் தற்காப்பு வாதத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். அவர்கள் அப்படிச் செய்யாமல் வேதத்தில் உள்ள தனித் தனி வசனங்களைக் கோடி காட்டி, அதில்காணப்படுகிற விபச்சாரங்களை விமர்ச்சித்தது அவர்களுக்குப் பாதகத்தையே கிளப்பி விட்டிருப்பதைப் பின்வரும் கட்டுரையில் காணலாம். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் முடிந்த வரையில் நடுநிலையாகவே இருபக்க வாதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து எழுதியிருக்கிறேன். இதுபோன்ற ஆரோக்கியமான கட்டுரைகளும் விவாதங்களும் ஏராளமாக வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதே நேரத்தில் அவற்றை நிதானமாக வாசிக்குமளவும் நமக்கு நேரமும் வாய்ப்பும் கிட்ட வேண்டும். இனி தொடர்ந்து எனது கட்டுரையை வாசியுங்கள்..... வாக்கு மாறும் முகமது முதலில் திஷ்யாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு, ஒருவரின் (யாரென்று தெரியவில்லை) பேச்சைக் கேட்டு, ஷஃப்பியாவைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்கிறார். இங்கு நான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கிறேன். முகமது செய்தது நியாயமாகப் படவில்லை. தன்னுடைய கைபர் படையெடுப்பை வெற்றிகரமாக ஆக்கித் தந்த ஒரு படைத் தளபதிக்கு அவன் கேட்டும் பரிசைக் கொடுத்து விட்டு, பின்னர் அதனை அபகரித்துக் கொள்ளலாமா? இது ஒரு தலைவருக்கு அழகா? இன்னொரு காரியம் என்னவென்றால், ஷஃப்பியா திஷ்யாவின் கையில் இருக்கும்போது இன்னும் அடிமையாகவே இருக்கிறார். முகமதுவின் கையில்தான், அதுவும் அவருக்கு மனைவியாக்கப்படும் பட்சத்தில்தான் விடுவிக்கப் படுகிறாள். நான் கேட்கப் போகும் இந்தக் கேள்வி ஒருவேளை பெலவீனமான கேள்வியாகக் கூட இருக்கலாம். அதாவது, திஷ்யாவுக்கு சஃப்பியா விருந்தாகியிருந்தால், அப்பெண் கடைசி வரை அடிமையாவே இருக்க வேண்டுமா? (அதாவது முகமதுவுக்குச் சொந்தமானால் மட்டும்தான் ஒரு பெண் கைதிக்கு விடுதலை கிடைக்குமா?) இஸ்லாத்துக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, இது அநியாயமாக (அதாவது ரொம்ப ஓவர்) தெரிகிறது. http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=38&topic=1994&Itemid=287

By Anonymous on பகுதி இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 12/31/10


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, இந்த கேள்வி அல்லது கட்டுரையை நீங்கள் வேறு ஒரு இணையதளத்தில் இருந்து எடுத்து பிரசுரித்துள்ளிர்கள் என்பது அறியமுடிகிறது. இன்னும் அதிகபடியாக அந்த இணையதளத்தின் முகவரியையும் அளித்துள்ளிர்கள். திரு உமர் அவர்களுக்கு, விளக்கம் அளிபதையே முதன்மையாக கொண்ட துவங்கபெற்ற நம் இணையதளத்தில், நம் தலைப்பிற்கு ஒப்ப நம்மிடம் விடப்படும் விரசம் இல்லாத நேரடியான கேள்விகளுக்கே, நாம் இதுவரை பதில் அளிக்க முயற்சித்து உள்ளோம். இதன் அடிப்படையில் இந்த கேள்விகளுக்கும் இறைவன் கிருபையில் நாங்கள் பதில் அளிக்க முயற்சிக்கிறோம்.


திரு அனானிமஸ் அனானிமஸ் அவர்களே, மேலே எங்களுக்கு நீங்கள் / உமர் இரண்டு கேள்விகளை விடுத்துள்ளீர்கள்.

1. திஹ்யாவிடம் இருந்து ஸஃபிய்யாவை திரும்ப பெறுவது முலம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாக்கு மாறினார்களா?

2. முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடித்தால் மட்டுமே அடிமை பெண்களுக்கு விடுதலை கிடைக்குமா?


இந்த கேள்விகளுக்கு நம்முடைய விளக்கம்:

1. திஹ்யாவிடம் இருந்து ஸஃபிய்யாவை திரும்ப பெறுவது முலம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாக்கு மாறினார்களா?


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, நீங்கள் அறிவிப்பது போல் திஹ்யா ஒரு படை தளபதி கிடையாது. மாற்றாக அவர் ஒரு ஒற்றர், படைவீரர், நபி தோழர் ஆவார்.


திரு அனானிமஸ் அவர்களே, சரித்திரத்தை புரட்டி பார்தீர்களாயின், பொதுவாக யுத்தத்தில் கிடைக்க பெறும் செல்வத்தை அதிகப்படியாக அந்த நாட்டின் மன்னரே எடுத்துகொள்வார்கள். அவர் விரும்பினால் அந்த செல்வங்களில் சிலவற்றை தன் படை வீரர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதற்கு மாறாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தான் ஒரு மன்னராக இருந்த போதிலும், தன் படைவிரர்களுக்கு முதல் உரிமை அளித்து விட்டு, பின்னர் தனக்கு உரியதை எடுத்து கொள்வதை, திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் முலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


பொதுவாக யுத்தத்தின் முடிவில் அடிமை பிடிக்க பெற்றால், அவற்றில் எதிரி நாட்டின் தலைவர்கள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் இருப்பார்களாயின், அவர்களை அடிமையாக நடத்த / எடுத்துக்கொள்ள முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் யாரையும் அனுமதித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. அவர்களை இழிவு செய்யாமல் விடுதலை செய்வது முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது.


இவ்வாறு அடிமையாக பிடிக்கப்படும் எதிரி நாட்டின் மன்னர் மகளை விடுதலை செய்து அவருக்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க வாய்ப்பு அளிக்கப்படுவது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரே ஜுவைரியா பின்த் அல் ஹாரித் என்ற பானு முச்டளிக் குல தலைவர் மகளை யுத்தத்திற்கு பிறகு விடுதலை செய்து அவர் விருப்பத்துடன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிதுள்ளர்கள்.


இந்த கருத்தின் அடிப்படையில், யுத்தம் முடிவு பெற்ற நிலையில், திஹ்யா தனக்கு ஒரு அடிமை பெண்னை கேட்க, முஹம்மத் நபி அதற்க்கு அனுமதியும் தருகிறார். ஆனால் இதற்கு மாறாக, திஹ்யா எதிரி நாட்டின் தலைவி போன்று மதிக்க பெற்ற தலைவர் மகளான ஸஃபிய்யாவை தேர்வு செய்ய, அதை அறிந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அந்த பெண்னை அடிமைப்படுத்தி, இதன் மூலம் ஸஃபிய்யாவின் குலத்தை இழிவு செய்வதை விரும்பாமல், திஹ்யாவிற்க்கு ஸஃபிய்யாவை விடுத்து வேறு பெண்னை தேர்ந்தெடுக்க பணிக்கிறார். அவ்வாரே திஹ்யா வேறு ஒரு பெண்னை தன் பங்கிற்காக எடுத்து கொள்கிறார். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவிருக்கு விடுதலை அளிபதாக அறிவிக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் யூதராக தொடர அல்லது இஸ்லாத்தை தழுவி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க வாய்ப்பு தரபடுகிறது. இந்த வாய்ப்புபை ஏற்று கொண்டு ஸஃபிய்யா இஸ்லாத்தை தழுவி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், இறுதி வரை முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகவும், சிறந்த ஹதிஸ் அறிவிப்பாளர்ராகவும் திகழ்கிறார்.


சரி ஒரு பொருளை பரிசாக வழங்குபவர், அந்த பொருளின் மேன்மையை/முக்கியத்துவத்தை அறிந்து, அதை திரும்ப பெற்று கொண்டு, அதற்கு மாறாக வேறு ஒரு பொருளை பரிசாக அளிப்பது நடை முறையில் இல்லாததா?


உதாரணமாக, உங்களிடம் ஒரு கை கெடிகாரத்தை பரிசாக கேட்கிறோம் என்று வைத்து கொள்வோம், உங்களிடம் உள்ள சில கை கெடிகாரங்களில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறீர்கள், உங்களுக்கு வேறு ஒரு முக்கியமான நபர் பரிசாக வழங்கிய ஒரு முக்கியமான கெடிகாரத்தை நாம் தேர்வு செய்வோமேயானால், அதன் முக்கியத்தை நீங்கள் அறிந்து இருந்தால், அதற்கு மாறாக வேறு கெடிகாரத்தை தேர்வு செய்து கொள்ள எங்களை பணிக்க மாட்டீர்களா? வேறொரு கெடிகாரத்தை தேர்வு செய்து கொள்ள நாங்களும் தயாரான நிலையில் இது எப்படி தவறாகும்? இதை தானே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள், அது எப்படி தவறாகும்? சிந்தியுங்கள்...


---------------------------------------------------------------------------------------


2. முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடித்தால் மட்டுமே அடிமை பெண்களுக்கு விடுதலை கிடைக்குமா?


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, இது போன்ற கேள்விகள் முன்னமே வந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் வண்ணம், இஸ்லாமில் அடிமை பெண்கள் பற்றிய விளக்கமான கட்டுரையை “உமரின் "குர்‍ஆனில் அடிமைப் பெண்கள்....என்ற கட்டுரைக்கு வாசகர் பதில்” என்ற தலைப்பில் http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_15.html என்ற முகவரியில் பிரசுரித்து உள்ளோம். அதை நீங்கள் படிக்கும்மாறு வேண்டி கேட்டுகொள்கிறோம்.


இஸ்லாமை ஏற்று இஸ்லாமியனை மஹர் இன்றி திருமணம் முடிக்கும் அடிமை பெண்களுக்கு, இஸ்லாமில் சுகந்திரமான பெண்ணுக்கு உரிய அணைத்து உரிமைகளும் உண்டு. சொத்துரிமை முதற்கொண்டு வாரிசு உரிமை வரை, அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. இதற்கு பிறகு அவர்களை அடிமைகளாக விற்க்க முடியாது, இன்னும் பல இஸ்லாமிய சட்டங்கள் மேலே குடுக்கபெற்றுள்ள முகவரியில் பிரசுரித்து உள்ளோம், அதை நீங்கள் படித்து கொள்ளுமாறு வேண்டி கேட்டு கொள்கிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்


அஸ்ஸலாமு அழைக்கும்


கேள்வி:

எண்ணாகமம் 31.17, 31.31, ஆதியாகமம் 22.28 ஆகிய வசனங்கள் முன் வைக்கப்பட்டு, கிறிஸ்தவம் கற்பழிப்பு என்ற பாவச் செயலை அனுமதிக்கிறது என்று வாதிடுகிறது. உங்கள் கேள்விக்கு மாற்கு 10.5 பதில் உரைக்கிறது. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, உங்கள் இருதய கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு (மோசே) எழுதிக் கொடுத்தான், என்று எழுதப் பட்டிருக்கிறது.

By Anonymous on பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 1/14/11

அதே அதிகாரத்தில் 11,12ம் வசனத்தை வாசிப்போமேயானால், முகமதுவின் செயல் பாவத்துக்குரியது என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. வசனத்தைப் பாருங்கள்.... 11. எவனாகிலும் (முகமது உட்பட) தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் அவளுக்கு (கத்திஜாவுக்கு) விரோதமாய் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான். 12. மனைவியும் (ஸஃப்யியாவும்) தன் புருஷனைத் தள்ளிவிட்டு (முகமதுவால் கொலைசெய்ய விட்டு), வேறொருவனை விவாகம் பண்ணினால், விபசாரஞ் செய்கிறவளாயிருப்பாள், என்றார்.

மத்தேயு 10.34ஐ மேற்கோட்டி, கிறிஸ்தவம் ஏதோ ஒரு தவறான போதனையை உபதேசிப்பது போல் கூற வருகிறீர்கள். ஏன் ஒவ்வொரு வாதத்திலும் ஒரே ஒரு வசனத்தை மட்டும் உதாரணம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் மத்தேயு 10.34ஐ உதாரணம் காட்டியதால், அந்த அதிகாரத்தின் 30வது வசனத்தை வாசிக்கும் போது, உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது, என்றும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன். இந்த அவசர காலத்தில் நமது சொந்த பிறந்த நாளைக் கூட மறந்து போகின்ற நிலையில், நாம் ஒவ்வொருவருடைய தலை மயிரையும் எண்ணிப் பார்த்து கணக்கு வைக்கிற அந்த சர்வ வல்ல தேவன் யார் என்று ஆராயத் தொடங்கினால், உங்களுடைய நிலைமை பரிதாபமாகி விடும். ஏனென்றால், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் அறியாத ஒருவர் கண்ணில் இப்படிப்பட்ட வசனம் பட்டால், இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் யார் என்று தொடர்ந்து வேதத்தை வாசித்து ஆராயத் தொடங்குவார். அப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் பெருமையாக எழுதிக் கொள்வது போல், இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவம் தான் வளரும்.

By Anonymous on பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 1/14/11


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, மேலே உங்கள் கருத்தில் இருந்து இந்த கேள்விகளை முன் வைப்பதாக எங்களால் அறிய முடிகிறது.

1. பைபிள் கற்பழிப்பை அனுமதிக்கவில்லை, மாற்கு 10.5 பதில் உரைக்கிறது. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, உங்கள் இருதய கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு (மோசே) எழுதிக் கொடுத்தான், என்று எழுதப் பட்டிருக்கிறது.

2. அதே அதிகாரத்தில் 11,12ம் வசனத்தை வாசிப்போமேயானால், முகமதுவின் செயல் பாவத்துக்குரியது என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.

3. மத்தேயு 10.34ஐ மேற்கோட்டி, கிறிஸ்தவம் ஏதோ ஒரு தவறான போதனையை உபதேசிப்பது போல் கூற வருகிறீர்கள். ஏன் ஒவ்வொரு வாதத்திலும் ஒரே ஒரு வசனத்தை மட்டும் உதாரணம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

4. மத்தேயு 10.34ஐ உதாரணம் காட்டியதால், அந்த அதிகாரத்தின் 30வது வசனத்தை வாசிக்கும் போது, உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது, என்றும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன். இந்த அவசர காலத்தில் நமது சொந்த பிறந்த நாளைக் கூட மறந்து போகின்ற நிலையில், நாம் ஒவ்வொருவருடைய தலை மயிரையும் எண்ணிப் பார்த்து கணக்கு வைக்கிற அந்த சர்வ வல்ல தேவன் யார் என்று ஆராயத் தொடங்கினால், உங்களுடைய நிலைமை பரிதாபமாகி விடும். ஏனென்றால், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் அறியாத ஒருவர் கண்ணில் இப்படிப்பட்ட வசனம் பட்டால், இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் யார் என்று தொடர்ந்து வேதத்தை வாசித்து ஆராயத் தொடங்குவார். அப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் பெருமையாக எழுதிக் கொள்வது போல், இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவம் தான் வளரும்.


இத கேள்விகள் கருத்துகளுக்கு நம்முடைய விளக்கம்.

1. பைபிள் கற்பழிப்பை அனுமதிக்க வில்லை, மாற்கு 10.5 பதில் உரைக்கிறது. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, உங்கள் இருதய கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு (மோசே) எழுதிக் கொடுத்தான், என்று எழுதப் பட்டிருக்கிறது.


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, நீங்கள் பைபிளை நன்கு அறிந்த பிறகே இந்த கருத்தை அறிவிக்கிறீர்களா?


பெண்களை கற்பழிக்க பைபிள் அனுமதிப்பது பற்றி “உங்கள் இருதய கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு (மோசே) எழுதிக் கொடுத்தான்” என்று ஈஸா (அலை) அறிவித்தாரா?


எங்களை ஒரு வசனத்தை மட்டும் பிரசுரிக்கிறோம் என்று பழித்து விட்டு நீங்கள் ஒரு வசனத்தை மட்டும் பிரசூரிக்கிறீர்களே? இதோ நீங்கள் சுட்டிக்காட்டிய பைபிள் வசனம்.

Mark 10:2 Then some Pharisees came, and to test him they asked, “Is it lawful for a man to divorce his wife? 10:3 He answered them, “What did Moses command you?” 10:4 They said, “Moses permitted a man to write a certificate of dismissal and to divorce her.” 10:5 But Jesus said to them, “He wrote this commandment for you because of your hard hearts.


திரு அனானிமஸ் அவர்களே, நீங்கள் கொடிற்ற வசனம் அடிமை பெண்களை கற்பழிக்க பைபிள் பணித்த வசனத்தை, ஈஸா (அலை) மறுத்ததாக அறிவிக்க வில்லை. மாறாக பெண்களை தகுந்த காரணம் இன்றி விவாகரத்து செய்யப்படுவதை தடுப்பதற்காக ஈஸா (அலை) அறிவித்தது, என்பது தெளிவாக விலங்குகிறது.


ஈஸா (அலை) யின் பதில், பெண்கள் காரணம் இன்றி விவாகரத்து செய்யலாம் என்ற சலுகையை எதிர்த்தே தவிர, அடிமை பெண்கள் கற்பழிக்கப்படுவதை எதிர்த்து அல்ல. அப்படி ஒரு ஈஸா (அலை) யின் வாயிலான மறுப்பு பைபிளில் இருப்பதை நம்மால் அறிய முடியவில்லை.


திரு அனானிமஸ் அவர்களே, பைபிள்லை முதலில் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். எந்த வசனத்துக்கு ஈஸா (அலை) மறுப்பு தெரிவித்தாரோ அதற்கு மட்டும் தான் அந்த மறுப்பு பொருந்தும். மாறாக அந்த மறுப்பை கொண்டு, மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளியதாக பைபிள் அறிவிக்கும் பழி பாவசெயல்களை அனைத்தையும் மறுக்க முடியாது. அப்படி மறுக்க நீங்கள் முயற்சித்தால் பைபிள் அறிவிக்கும் இறைவனின் கட்டளைகளை சேர்த்தே நீங்கள் மறுபதாகும். இது ஈஸா (அலை) யின் கருத்துக்கு மாறானதாகும், ஏனெனில் அவர் அறிவித்தார்:

Matthew 5:17 “Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfill them. 5:18 I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. 5:19 So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. 5:20 For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven.


இதன் அடிப்படையில் ஈஸா (அலை) யின் பதில், பெண்கள் காரணம் இன்றி விவாகரத்து செய்யலாம் என்ற சலுகையை எதிர்த்தே தவிர, அடிமை பெண்கள் கற்பழிக்கப்படுவதை எதிர்த்து அல்ல என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


----------------------------------------------------------------------------------------------


2. அதே அதிகாரத்தில் 11,12ம் வசனத்தை வாசிப்போமேயானால், முகமதுவின் செயல் பாவத்துக்குரியது என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, மார்க் 11, 12 முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் செயல்கள் பாவத்திற்கு உரியது என்று அறிவிகிறதா? இதோ நீங்கள் கொடிற்ற வசனம்:

11. எவனாகிலும் (முகமது உட்பட) தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் அவளுக்கு (கத்திஜாவுக்கு) விரோதமாய் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான். 12. மனைவியும் (ஸஃப்யியாவும்) தன் புருஷனைத் தள்ளிவிட்டு (முகமதுவால் கொலைசெய்ய விட்டு), வேறொருவனை விவாகம் பண்ணினால், விபசாரஞ் செய்கிறவளாயிருப்பாள்


நீங்கள் அறிவித்த வசன்கங்கள் நபி (ஸல்) அவர்களின் செயல்கள் பாவத்திற்கு உரியது என்று அறிவிகிறதா? இதோ இந்த வசனம் ஆங்கிலத்தில்:

Mark 10:11 So he told them, “Whoever divorces his wife and marries another commits adultery against her. 10:12 And if she divorces her husband and marries another, she commits adultery.”


மேலே உள்ள பைபிள் வசனம், தன் மனைவியை தக்க காரணம் இன்றி விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்னை கை பிடிப்பது பாவத்திற்கு உரியது என்று உரைக்கிறதே தவிர, ஒரு மனைவி இருக்க அவளை விவாகரத்து செய்யாமல் ஒன்றுக்கு மேல் திருமணம் முடிப்பதை தவறு என்று அறிவிக்கவில்லை.


இன்னும் பைபிள்ளில் ஒரு மனைவி இருக்க, ஒன்றுக்கு மேல் திருமணம் முடிப்பது தவறு என்று ஈஸா (அலை) தன் வாயால் அறிவித்த எந்த தெளிவான வசனமும் இருப்பதாக நம்மால் அறியமுடியவில்லை.


இன்னும் பைபிள் தெளிவாக, ஒரு மனிதன் இரண்டு பெண்களிடம் தொடர்ப்பு கொண்டு இருந்தால் அவர்களிடையே வாரிசு உரிமை எப்படி அமைக்க வேண்டும் என்றும் விளக்குகிறது, ஒன்றுக்கு மேல் திருமணம் பாவத்திற்கு உரியது என்றால் பைபிளின் இறைவன் இப்படிப்பட்ட சட்டங்களை விளக்குவானா?

Deuteronomy 21:15 Suppose a man has two women, one whom he loves more than the other, and they both bear him sons, with the firstborn being the child of the less loved women. 21:16 In the day he divides his inheritance he must not appoint as firstborn the son of the favorite women in place of the other women’s son who is actually the firstborn. 21:17 Rather, he must acknowledge the son of the less loved women as firstborn and give him the double portion of all he has, for that son is the beginning of his father’s procreative power – to him should go the right of the firstborn.


மேலே கோடிற்றப்பட்ட பைபிள் ஆதாரங்கள் முலம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனைவி இருக்க அவளை விவாகரத்து செய்யாமல் ஒன்றுக்கு மேல் அதிகபடியாக மனைவிகளை இறைவன் வழங்கியது பாவத்திற்கு உரிய செயல் இல்லை என்பது தெளிவாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம்.


---------------------------------------------------------------------------------------------


3. மத்தேயு 10.34ஐ மேற்கோட்டி, கிறிஸ்தவம் ஏதோ ஒரு தவறான போதனையை உபதேசிப்பது போல் கூற வருகிறீர்கள். ஏன் ஒவ்வொரு வாதத்திலும் ஒரே ஒரு வசனத்தை மட்டும் உதாரணம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, நாங்கள் ஒரு வசனத்தை மட்டும் பிரசுரிபதாக பழித்து விட்டு, நீங்களும் அதையே செய்கிறீர்களே?


சரி நாங்கள் பிரசுரிக்கும் பைபிள் வசனங்கள் தவறாக கோடிடப்பட்டுள்ளதா?


நாங்கள் தலைப்புக்கு ஒப்ப வசனங்களை தானே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் தவறு ஏதும் நீங்கள் அறிந்தால் எங்களை திருத்துங்கள், நாங்கள் மொழிந்தது தவறாக இருந்தால் அதை நாங்கள் பிழை திருத்த தயங்க மாட்டோம். இதே போல் நாங்கள் சுட்டிக்காட்டிய தவறை திருத்த உங்கள் உமரை பணிக்க நீங்கள் தயாரா?


---------------------------------------------------------------------------------------------


4. மத்தேயு 10.34ஐ உதாரணம் காட்டியதால், அந்த அதிகாரத்தின் 30வது வசனத்தை வாசிக்கும் போது, உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது, என்றும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன். இந்த அவசர காலத்தில் நமது சொந்த பிறந்த நாளைக் கூட மறந்து போகின்ற நிலையில், நாம் ஒவ்வொருவருடைய தலை மயிரையும் எண்ணிப் பார்த்து கணக்கு வைக்கிற அந்த சர்வ வல்ல தேவன் யார் என்று ஆராயத் தொடங்கினால், உங்களுடைய நிலைமை பரிதாபமாகி விடும். ஏனென்றால், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் அறியாத ஒருவர் கண்ணில் இப்படிப்பட்ட வசனம் பட்டால், இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் யார் என்று தொடர்ந்து வேதத்தை வாசித்து ஆராயத் தொடங்குவார். அப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் பெருமையாக எழுதிக் கொள்வது போல், இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவம் தான் வளரும்.


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, இதை தான் நாங்கள் உங்களையும் மற்றும் எல்லா கிறிஸ்தவர்களையும் செய்ய வேண்டுகிறோம். இப்படி சர்வ வல்லமை படைத்த தேவன் யார் என்று ஆராய உங்களுக்கு நேரம் இல்லையா? நீங்கள் கோடிற்ற வசனங்களை பாருங்கள்.

Matthew 10:28 Do not be afraid of those who kill the body but cannot kill the soul. Instead, fear the one who is able to destroy both soul and body in hell. 10:29 Aren’t two sparrows sold for a penny? Yet not one of them falls to the ground apart from your Father’s will. 10:30 Even all the hairs on your head are numbered. 10:31 So do not be afraid; you are more valuable than many sparrows. 10:32 Whoever, then, acknowledges me before people, I will acknowledge before my Father in heaven. 10:33 But whoever denies me before people, I will deny him also before my Father in heaven.


திரு அனானிமஸ் அவர்களே, நீங்கள் அறிவித்த வசனம் சர்வ வல்லமை படைத்த இறைவன் நான் தான் என்று ஈஸா (அலை) அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. மாறாக உலகத்தோரின் தந்தையாக பைபிளில் வணங்க பெறும் எலொஹ்/அல்லாஹ் வை குறிக்கிறது. இதை யாரேனும் ஆராய முனைந்தால், கிறிஸ்தவம் மொழியும் மூன்று கடவுள் கொள்கை தவுடுபொடியாகிவிடும் என்பது நீங்கள் அறியாததா?


இன்னும் பைபிள் அறிவிக்கும் இறைவன் யார் என்று ஆராய ஆரம்பித்தால் ஈஸா (அலை) கடவுள் இல்லை மாறாக சிறந்த இறைதூதர் என்பதே தெளிவாகும், இதன் மூலம் கிறிஸ்தவம் தழைக்கும் என்று நம்புகிறீர்களா?


சரி ஈஸா (அலை) அவர்களின் வார்த்தை என்ன ? வணக்கத்துக்கு உரிய இறைவன் ஒருவனே...

Mark 12:28 Now one of the experts in the law came and heard them debating. When he saw that Jesus answered them well, he asked him, “Which commandment is the most important of all?”12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one. 12:30 Love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength.’ 12:31 The second is: ‘Love your neighbor as yourself.’ There is no other commandment greater than these. 12:32 The expert in the law said to him, “That is true, Teacher; you are right to say that he is one, and there is no one else besides him. 12:33 And to love him with all your heart, with all your mind, and with all your strength and to love your neighbor as yourself is more important than all burnt offerings and sacrifices.” 12:34 When Jesus saw that he had answered thoughtfully, he said to him, “You are not far from the kingdom of God.” Then no one dared any longer to question him.


இன்னும் ஈஸா (அலை) அவர்கள் கூறுகிறார்கள் "இறைவன் ஒருவனை வணங்கினால் அன்றி சொர்கம் இல்லை" என்று..

Matthew 7:21 Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter into the kingdom of heaven – only the one who does the will of my Father in heaven.


நீங்கள் வல்லமை பொருந்தியவராக அறிவிக்கும் ஈஸா (அலை) தனக்கு தானே சாட்சி கூறுகிறார். தனக்கு தன் உணவை உருவாக்க வல்லமை இல்லை என்று:

John 4:34 Jesus said to them, “My food is to do the will of the one who sent me and to complete his work.

John 7:16 So Jesus replied, My teaching is not from me, but from the one who sent me. 7:17 If anyone wants to do God’s will, he will know about my teaching, whether it is from God or whether I speak from my own authority. 7:18 The person who speaks on his own authority desires to receive honor for himself; the one who desires the honor of the one who sent him is a man of integrity, and there is no unrighteousness in him. 7:19 Hasn’t Moses given you the law? Yet not one of you keeps the law! Why do you want to kill me?”


நபி ஈஸா (அலை) அவர்கள் தான் கடவுள் என்றால், சொர்க்கத்தில் தன் உடன் யார் அமரவேண்டும் என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்று ஏன் கூற வேண்டும்? சர்வ வல்லமை படைத்தவனுக்கு இது கடினமான செயலா?

Matthew 20:23 He told them, "You will drink my cup, but to sit at my right and at my left is not mine to give. Rather, it is for those for whom it has been prepared by my Father."


இறைவ னின் விருப்பமே நடைபெறும் என்று..

Luke 22:42 "Father, if you are willing, take this cup away from me. Yet not my will but yours be done."


இப்படிப்பட்ட தெளிவான பைபிள் வசனங்களை ஆராயும் எவரும் இஸ்லாம் பணிக்கும் சர்வ வல்லமை படைத்த ஒரே இறைவனை வணங்க முன் வருவார்கள் அன்றி நீங்கள் அறிவிப்பது போல் மூன்று கடவுள்களை வணங்க முன் வர மாட்டார்கள்.


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்


அஸ்ஸலாமு அழைக்கும்

கேள்வி:

உமர் எழுதியது: நான் கேட்டேன்: ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, திருமணம் செய்துக்கொண்டு முஹம்மது உடலுறவு கொண்டாரா அல்லது அடிமையாகவே ஸாபிய்யா இருக்கும் போது அவருடன் உடலுறவு கொண்டாரா என்று கேட்டேன்.

அடிமையாகவே இருக்கும் போது உடலுறவு கொண்டால் அது விபச்சாரம் ஆகுமல்லவா? இதனை சமாளிக்க இஸ்லாமியர்கள் "விடுதலை செய்து, திருமணம் செய்துக்கொண்டு தான் உடலுறவு" கொண்டார் என்று ஒரு விவரத்தை (பொய்யைச்) சொன்னார்கள். ஆனால், இந்த "இத்தா" பற்றி கேள்வியை கேட்கும் போது, அடிமைப்பெண்ணுக்கு இத்தா இல்லை என்றுச் சொல்கிறார்கள். அப்படியானால், ஸபிய்யாவை அடிமையாகவே இருக்கும் போது அவளுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இதன் மூலமாக, விடுதலை செய்து, திருமணம் புரிந்து தான் உடலுறவு கொண்டார் என்பது பொய்யாகின்றது, இதனை அவர்களாகவே ஒப்புக்கொண்டார்கள், அப்படித்தானே! ஆக, இஸ்லாமியர்கள் இப்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதாவது ஸபிய்யா அடிமையாகவே இருக்கும் போது முஹம்மது கற்பழித்துள்ளார் மரியாதையாக சொல்லவேண்டுமென்றால் உடலுறவு கொண்டுள்ளார், இன்னும் மரியாதையாக இஸ்லாமிய முறையில் சொல்லவேண்டுமானால் வீடு கூடியுள்ளார். இதைத் தானே என் முதலாவது கட்டுரையில் நான் கேட்டேன்: "முஹம்மது செய்தது திருமணமா அல்லது கற்பழிப்பா?" என்று. முதலில் அவர்கள் திருமணம் என்றுச் சொன்னார்கள், ஒரு பெண் எப்படி அங்கீகரிப்பாள் என்று மறுகேள்வி கேட்டப்போது, கனவு வந்தது என்றார்கள், இப்படிப்பட்ட கனவை கொடுப்பவன் இறைவனா.. இந்த கனவை நம்பி தன்குடும்பத்தை அழித்தவரை திருமணம் செய்யும் ஒரு பெண் பெண்ணா? என்று கேட்டபோது, பதிலைச் சொல்லாமல், ஸபிய்யா முஹம்மதுவோடு நன்றாகத் தானே வாழ்ந்தார் என்றுச் சொனனார்கள், ஆனால் கேட்ட கேள்வி, முதலில் நடந்தது திருமணமா அல்லது கற்பழிப்பா என்பதாகும். கடைசியாக, "இத்தா" பற்றி கேட்டபோது, தங்கள் நபியை காப்பாற்ற "அடிமைப்பெண்ணுக்கு" இத்தா இல்லை என்றார்கள், அப்படியானால், ஸபிய்யா அடிமையாகவே இருக்கும் போது அவளுக்கு இத்தா காலத்தை ஒதுக்காமல் அவளை முஹம்மது கற்பழித்தார் என்பது நிருபனம். இதனை இவர்கள் வாயாலேயே வெளியே கொண்டுவர இத்தனை பாடு/கட்டுரைகள்/கேள்விகள்/பதில்கள் படவேண்டியிருக்கிறது.

By Anonymous on பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 1/14/11


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, மேலே நீங்கள் எங்களை பற்றி வெளியிட்ட திரு உமர் அவர்களின் கருத்து, முழுக்க முழுக்க அப்பட்டமான பொய். அது சரி தன்னை கடவுள் என்று அறிவிக்காத ஈஸா (அலை) தான் கடவுள் என்று பொய்யுரையை அறிவிக்க முயற்சிக்கும் திரு உமர் அவர்களுக்கு நம் மீது பொய்யுரைக்க கடினமா என்ன?


அடிமைகளுக்கு இத்தா தவணை கிடையாது என்று நாங்கள் அறிவித்த ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?


நாங்கள் அறிவித்தது: இஸ்லாமியர்களுக்கு உரிய இத்தா தவணை இஸ்லாம் அல்லாதோருக்கு கிடையாது. அதற்கு மாறாக, இஸ்லாத்தை ஏற்காதோர் மற்றும் அடிமைகள் இஸ்லாத்தை ஏற்க்கும் பொழுது, அவர்களுக்கு இத்தா தவணை ஒரு மாதவிடாய் விளக்கு மட்டுமே. இந்த தவணையை முறையே ஸஃபிய்யா நிறைவு செய்த பிறகே, அவர்களின் அனுமதியுடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து வீடு கூடினர்கள். அவ்வாறு இல்லை என்று திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பினால், இது கற்பழிப்பு என்று நிரூபிக்க, தக்க தெளிவான ஆதாரத்தை, திரு உமர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்பதாகும். இதை மறைத்து பொய்யுரை வரைவதையே கொள்கையாக கொண்ட திரு உமர் அவர்கள், நாங்கள் கருத்து மாறுவதாக பொய்யுரைகிறார்.


ஏன் திரு உமர் அவர்கள் இதை அவருடைய தளத்தில் வெளியிடாமல் கோழைத்தனமாக!!! தமிழில் இப்படியாக சொல்வார்கள், “பத்தோடு பதினொன்றாக” கட்டுக்கதைகளை அவிழ்துவிட்டுள்ளார். மூன்று கட்டுரைகளை ஒரே நேரத்தில் வெளியிட நேரம் கிடைத்த உமருக்கு இந்த பத்தியை அவருடைய தளத்தில் வெளியிட நேரம் இல்லை போலும். என்ன ஒரு வேடிக்கை! தனியாக எழுதினால் கேள்வி கேட்பார்கள். இப்படி பத்தோடு பதினொன்றாக இடை சொருகிவிட்டால் யார் கண்டுகொள்ள போகிறார்கள் என்ற எண்ணம் போலும்?


பகுதி இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி” என்ற கட்டுரையில் இந்த முகவரியில் http://isaakoran.blogspot.com/2010/12/blog-post_17.html தெளிவான ஆதாரத்துடன் நாங்கள் வெளியிட்ட கருத்து:


திரு உமர் அவர்களே, உங்களுடைய கேள்வியை நீங்கள் மறுமுறை படித்து பாருங்கள். இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால்”, “இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால்நீங்கள் குறிப்பிட விரும்பும் இஸ்லாமிய சட்டம் இஸ்லாமியர் அல்லாதோருக்கு பொருந்துமா?

ஸஃபிய்யா கணவனை இழந்த பொழுது அவர் இஸ்லாத்தை தழுவி இருந்தாரா?

இஸ்லாம் அல்லாதோருக்கு இஸ்லாமிய சட்டம் கிடையாது என்பதை இஸ்லாமிய அறிஞர் என்று உங்களை காட்டிகொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு இது அறியாததா?....


Sahih Bukhari 5286. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர்.... பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாம்) நாடு துறந்து (மதீனாவுகு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள். பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ பெண்ணோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (நாடு துறந்து வந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.. பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ(ரஹ்), (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித்(ரஹ்) அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவித்தார்கள்: “(சமாதான) ஒப்பந்தம் செய்த இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பிவைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.


திரு உமர் அவர்களே, மேலே கொடுக்க பெற்ற ஆதரங்கள் முலம் ஸஃபிய்யா தன் கணவனை இழந்த பொழுது அவர் இஸ்லாத்தை தழுவி இருக்கவில்லை என்றும், அவர் கணவனுடன் வீடு கூடி இருக்க வாய்ப்புகள் மிக சொற்பமாகவே இருப்பதனாலும், கைபர் யுத்தத்தில் அடிமையாக பிடிக்க பெற்ற ஸஃபிய்யா தன் (தவணை முறையாக)மாதவிடாய் விளக்கு நீங்கிய பிறகு இஸ்லாத்தை தழுவி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை விருப்பத்துடனே திருமணம் செய்து வீடு கூடினார் என்பது தெளிவாகிறது, அவ்வாறு அல்ல என்று நீங்கள் எதிர் வாதம் செய்ய எண்ணினால் உங்கள் பொய் கூற்றுகளை கொண்டு கட்டுரை வரையாமல் தெளிவான ஆதாரத்தை முன் வைக்க முயற்சித்தால் அதை நாங்கள் எல்லாம் வல்ல இறைவன் உதவியால் தகர்த்து ஏறிய முயற்சிப்போம்...


எழுத்து விவாதத்திற்கு அரைகூவல் விடுத்துவிட்டு இப்படி காலதாமதம் செய்வதும், மறைவாக வேறு தளங்களில், பொய்யான விளக்கங்கள் அளிப்பது மூலம் முதுகில் குத்த முயற்சிப்பதும் தான் உண்மை கிறிஸ்தவருக்கு அழகா?


எதிர் வாதத்திர்க்கு எங்களை அழைத்துவிட்டு, “வருவார்கள், எழுதுவார்கள், மறைந்துவிடுவர்கள், என்று வீர வசனம் மொழிந்துவிட்டு” இப்பொழுது முகவரி இல்லாமல் மறைந்து கிடப்பதுதான் கிறிஸ்தவம் போதிக்கும் முறையா?


எங்களுக்கு எதிர்வாதம் செய்ய நேரம் இல்லை என்று பொய்யுரைத்து விட்டு, வேறு தளங்களில் பொய்யுரைகளை அளிக்கும் நபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? வாசகர்களே விளக்குங்கள்...


இஸ்லாம் அல்லாதோருக்கு ஒரு மாதவிடாய் இத்தா தவணை என்ற விளக்கத்திற்கு சில முகவரி இல்லாத கிறிஸ்தவர்கள் “இஸ்லாம் அல்லாதோருக்கு ஏன் இத்தா தவணை ஒரு மாதவிடாய் விளக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது? ஹிந்து சமுகத்தில் ஓர் ஆண்டுகாலம் இத்தா இருப்பது வழக்கத்தில் உள்ளது அது உங்களுக்கு தெரியாதா” என்பது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.


நாங்கள் அறிவிக்கும் இத்தா தவணை, இறைவன் அருளிய சட்டம் பற்றியது. நீங்கள் அறிவிக்கும் சடங்கு, ஒரு சமுகத்தில் வழக்கத்தில் இருப்பது பற்றியது.


ஒரு சமூகத்திடம் வழக்கத்தில் இருக்கும் ஒரு சடங்கை அனைவரும் கடைபிடிப்பது இல்லை, கடைபிடிக்க வேண்டும் என்பது அவர்கள் மீது கட்டாயமும் கிடையாது. அது கடைபிடிக்கப்படவில்லை என்றால் இறைவன் அவர்கள் மீது குற்றம் பிடிக்க போவதும் கிடையாது. ஆனால் இறைவன் அருளிய சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் அது இறைவன் பார்வையில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.


நீங்கள் இன்னும் தெளிவாக விளங்க, இஸ்லாமியர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு உணவளிப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் அடுத்தவர் வீட்டினுள் நுழையும் முன் அனுமதி கேட்டு நுழையவேண்டும் என்பது இறைவன் அருளிய சட்டமாகும். விருந்தாளிக்கு உணவளிக்கா விட்டால், இறைவன் நம்மை குற்றம் பிடிக்கபோவது இல்லை. மாறாக அனுமதி இல்லாமல் அடுத்தவர் வீட்டினுள் நுழைந்தால், இந்த தவறுக்கு முறையே இறைவனிடம் பாவமன்னிப்பு கோராமல் இருந்தால், அது இறைவன் பார்வையில் அவன் சட்டதிட்டங்களை நிறைவேற்றாத காரணத்தினால் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.


இப்படி வழக்கத்தில் இல்லாமல், இத்தா தவணை தங்கள் இறைவன் அருளிய வேத நூல் மூலம் சட்டம் ஆக்க பெற்ற ஏதேனும் ஒரு மார்கத்தை, தெளிவான ஆதாரத்துடன் எங்கள் முன் எடுத்து வையுங்கள் ஆயுவுக்காக...


இத்தா தவணை சட்டத்தை எதற்கு இறைவன் வழங்கினான் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்தீர்களாயின் இந்த கேள்வியை எங்களிடம் நீங்கள் கேட்கமாட்டீர்கள்.


இஸ்லாமியருக்கு இத்தா தவணை ஒரு பெண் கருவுற்று இருப்பதை தெளிவாக அறிய இறைவனிடத்தில் இருந்து அருள பெற்றது. எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் ஒரே தவணையில் வருவது இல்லை, இதனாலே அதிக படியாக நான்கு மாத தவணை இறைவன் அருளியுள்ளான். ஒரு பெண் கருவுற்று இருந்தால் நான்கு மாத இடைவெளியில் அவள் அதை மறைத்தாலும் அவளுடைய வயிறு இன்னும் பல தெளிவான அறிகுறிகள் காட்டிக் கொடுத்துவிடும் என்பதே அதற்கு காரணம்.


அப்படி ஒரு பெண் கருவுற்று இருந்தால், அந்த பெண்ணுக்கும், பிறக்க விருக்கும் பிள்ளைக்கும், சொத்துரிமை, வாரிசு உரிமை, பாதுகாவலர் போன்றவற்றை நிர்ணயிக்கவே இந்த இத்தா தவணையை இறைவன் வழங்கியுள்ளான். இந்த கடமைகள் அவளின் கணவனை சார்ந்தது என்பதாலும், இந்த இத்தா காலத்தில் அவர்கள் மனம் மாறி மீண்டும் இணைய கூடும் என்பதாலும் இறைவன் இந்த கால கெடுவை அறிவித்துள்ளான்.


மாறாக இஸ்லாம் அல்லாதோர் மற்றும் அடிமைகளுக்கு ஒரு மாதவிடாய் காலமே தவணையாக தரபெற்று உள்ளது, ஏனெனில் அவள் கருவுற்று இருப்பாலெனில் அவள் அந்த குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவளை யாரும் மணமுடிக்க முடியாது. இந்த கால தாமத இடைவெளியில் அவளின் கணவன் இஸ்லாத்தை ஏற்றால், அவனுடனே அவள் சேர்த்து வைக்க பெறுவாள். அல்லாது யுத்தத்தில் அடிமை பிடிக்க பெற்ற இந்த பெண்ணுக்கு மகரமாக வேறு ஒரு அடிமையையோ அல்லது செல்வத்தையோ கொடுத்து எதிரி நாட்டவர் அவள் விருப்பத்துடன் அவளை அழைத்து செல்ல இந்த தவணை ஏதுவாக இருக்கும்.


இந்த இத்தா தவனை முறையே நிறைவுற்ற பிறகு, அவளை யாரேனும் மஹர் இன்றி திருமணம் முடித்தால், அந்த குழந்தையை பராமரிப்பதும் அவன் மீதே கடமையாகிறது. அந்த குழந்தைக்கு சொத்துரிமை வாரிசுரிமை அனைத்தும் அவளை மணமுடித்த இஸ்லாமியன் இடம் இருந்தே பெற்று தரப் படுகிறது. இவ்வாறு பெற்று தரப்பட்ட போதிலும் அந்த குழந்தையை அதன் முறையான/உரிய தந்தையின் பெயரிலே அழைக்க பெறுகிறது. ஏன்னெனில் அடுத்தவர் பிள்ளைகளை தம் பிள்ளைகள் என்று அழைப்பது, தம் பெயர்கொண்டு அழைப்பது இஸ்லாமில் தடுக்கப்பட்டது ஆகும். இது அந்த பெண்மணியின் கற்பை இழிவுப்படுத்தும் செயலாகும். அடிமைகள் மற்றும் புதிதாக இஸ்லாமை ஏற்கும் பெண்கள் கருவுற்று இருந்தாலும், கருவுருவாமல் இருந்தாலும் அவர்களை பராமரிக்கும் பொறுப்பு, சொத்துரிமை போன்றவை அவளின் எஜமான் மீது சுமத்த படுகிறது. குழந்தையின் தந்தை யார் என்பதை நிர்ணயிக்க மட்டுமே அந்த ஒரு மாதவிடாய் தவணை தர பட்டுள்ளது.


இந்த ஒரு மாதவிடாய் தவணை நிறைவேற கால தாமதம் ஆனால், அதுவரை அவளை மஹர் இன்றி திருமணம் முடிக்க முடியாது. அவள் கருவுற்று இருந்தால் அதன் தந்தை யார் என்று நிர்ணயித்த பிறகு, அந்த குழந்தையை முறையே ஈன்றெடுத்த பிறகு, மஹர் இன்றி அவள் விரும்பும் ஆடவனை மணக்கலாம், இதில் அவள் மீது குற்றம் இல்லை.


மேலே கொடுக்க பெற்றுள்ள விளக்கங்கள் முலம் இஸ்லாமியர்களுக்கு உரிய இத்தா தவணை இஸ்லாம் அல்லாதோருக்கு கிடையாது. அதற்கு மாறாக, இஸ்லாத்தை ஏற்காதோர் மற்றும் அடிமைகள் இஸ்லாத்தை ஏற்கும் பொழுது, அவர்களுக்கு இத்தா தவணை ஒரு மாதவிடாய் விளக்கு மட்டுமே என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


திரு உமர் அவர்கள் அறிவிக்கும் அபாண்டமான பொய்யுரைகளை நாங்கள் மொழியவில்லை, “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து திருமணம் முடித்தார் என்று முதலில் அறிவித்துவிட்டு, பிறகு அடிமையாக இருந்த பொழுதே வீடு கூடினார்” என்று நாங்கள் கருத்துகளை மாற்றி அறிவிப்பதாக திரு உமர் அறிவிப்பது அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது வாசகர்களுக்கே தெரிந்து இருக்கும்.


திரு உமர் அவர்கள் போல “உமரின் இறைவன் தெளிவான ஆதாரத்தை எடுத்து கொடுக்க முன் வராத காரணத்தால் தலைப்பை மாற்றி” பகிரங்கமாக தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகும், எதிர்வாதம் செய்ய காலதாமதம் செய்யும் இழிவான நிலையில் எல்லாம் வல்ல இறைவன் எங்களை விட்டுவைக்கவில்லை.


அன்றும், இன்றும், என்றும் எங்களுடைய கருத்து, இஸ்லாமை ஏற்காத நிலையில் ஸஃபிய்யா இஸ்லாத்தை ஏற்கும் பொழுது அவருக்கு இஸ்லாம் அறிவிக்கும் இத்தா தவணை ஒரு மாதவிடாய் விளக்கு மட்டுமே. மேலும் இத்தாவின் நோக்கம் பெண்கள் தங்கள் வயிற்றில் உள்ளதை (கருவை) மறைக்காமல் இருப்பதற்காகவும், மற்றும் பிறக்க போகும் குழந்தையின் தந்தை யார் என்ற குழப்பத்தை நீக்குவதர்காகவுமே. இந்த தவணையை, ஸஃபிய்யா முறையே நிறைவு செய்த பிறகே, அவர்களின் அனுமதியுடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து வீடு கூடினர்கள் என்பதேயாகும்.


இதன் முலம் நாங்கள் அறிவிக்காத கருத்தை நாங்கள் அறிவித்தோம் என்று பொய்யுரைக்கும் திரு உமர் அவர்கள் எப்படிப்பட்ட உண்மை கிறிஸ்தவர் என்று வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.


இது வரை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது, தெளிவான ஆதாரம் இல்லாமல் பொய்யுரைக்க முயற்சித்து, தோல்வியுறுவதை வாடிக்கையாக கொண்டு இருந்த திரு உமர் அவர்கள், இப்பொழுது நம் மீது பொய்யுரைக்க துவங்கி இருக்கிறார். தொடரட்டும் அவருடைய போலி கிறிஸ்தவ பணி...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும்

கேள்வி:

உமர் எழுதியது: முஹம்மது தான் போதித்த உபதேசத்தை அவரே அனேக முறை மீறியிருக்கிறார், இதனால் தனக்கு மட்டும் அதிக சலுகைகளை உண்டாக்கிக்கொண்டார் (அல்லாஹ் கொடுத்ததாக மக்களை நம்பவைத்தார்). உலகில் எல்லா இஸ்லாமியர்களுக்கும் நான்கு மனைவிகள் அனுமதி, இவருக்கு மட்டும் கணக்கு இல்லை. தன் சீடர்கள் மரித்தால் அவர்களின் மனைவிகளை இவர் திருமணம் செய்யலாம், ஆனால், இவர் மரித்தால் இவரது மனைவிகளை யாரும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது. இப்படி அனேக சட்டங்கள் இவருக்கு மட்டும் உண்டு.

By Anonymous on பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 1/14/11


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, மேலே நீங்கள் திரு உமர் அவர்களின் முன்று கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள்:

1. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன் போதித்த உபதேசங்களை தானே அனேக முறை மீறியிருபதாக

2. உலகில் மனைவிகள் இடையே நீதமுடன் நடக்கக்கூடிய எல்லா இஸ்லாமியர்களுக்கும் அதிகபடியாக நான்கு மனைவிகள் வரை அனுமதிக்க, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் மட்டும் அதிக படியான மனைவிகள் அனுமதிக்க படுகிறது.

3. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நபி தோழர்கள் மரணித்தால் விதவையாக்கப்பட்ட அவர்களின் மனைவிகளை நபி மணந்து மறுவாழ்வு அளிக்கலாம், ஆனால் நபி மரணித்தால் அவரின் மனைவிகள் (உம்முள் முமினிஈன் – முமினின் அன்னையர்) யாரும் மனக்கலகாது.


இந்த கருத்துகளுக்கு நம்முடைய விளக்கங்களை பார்போம்:

1. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன் போதித்த உபதேசங்களை தானே அனேக முறை மீறியிருபதாக:


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தாங்கள் போதித்த உபதேசங்களை தானே அனேக முறை மீறினார் என்று, ஆதாரம் எதையும் முன் வைக்காமல் பொதுவாக அறிவித்தால் எப்படி? ஏதேனும் தெளிவான ஆதாரத்தை முன் வையுங்கள் இறைவன் கிருபையில் அதை தகர்த்து எறிய நாங்கள் முயற்சிப்போம்.


-----------------------------------------------------------------------------------------------


2. உலகில் மனைவிகள் இடையே நீதமுடன் நடக்கக்கூடிய எல்லா இஸ்லாமியர்களுக்கும் அதிகபடியாக நான்கு மனைவிகள் வரை அனுமதிக்க, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் மட்டும் அதிக படியான மனைவிகள் அனுமதிக்க படுகிறது.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவன் ஏன் அதிகப்படியான மனைவிகளை அனுமதிதான் என்பது போன்ற உங்கள் கேள்விக்கு முன்னமே இந்த வலைதளத்தில் “பகுதிமூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி, திரு உமர் அவர்கள் முன்வைத்த பொய்யான கூற்றுகளுக்கு / கேள்விகளுக்கு எங்களுடைய விளக்கம்.” என்ற தலைப்பில் http://isaakoran.blogspot.com/2011/01/blog-post.html என்ற முகவரியில் விளக்கம் அளித்துள்ளோம்.

அவற்றில் சில:

  • முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஒழுக்க மேன்மையை ஒரு மனைவி அறிவித்தால் அதில் சந்தேகம் எழக்கூடும், அதே ஒன்றுக்கு மேலான மனைவிகள், அதிலும் பல தரப்பட்ட குலத்தை சேர்ந்தவர்கள், அரசிகள், அடிமைகள், எதிரிகளின் மகள்கள் என்று அனைவரும் அவரின் மேன்மையை அறிவித்தால் அதில் சந்தேகம் எழ வாய்ப்பு இல்லை என்பதால்.
  • முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நபியின் அமல்களை அறிவிக்க லட்ச கணக்கான நபி தோழர்கள் தேவை பட, அவர் அந்தி சாய்ந்த பொழுதில் செய்த அமல்கள் அனைத்தையும் அறிவிக்க ஒரு மனைவியால் மட்டும் இயலாது என்பதால்.
  • இஸ்லாமியர்களுக்கு முந்திய வேதங்களில் மனைவிகள் எண்ணிகையில் எந்த கட்டுப்படும் அறிவிக்க பட்டதாக நம்மால் அறிய முடியவில்லை. இஸ்லாம் அருள பெற்ற உடன் இறைவன் மனைவிகள் எண்ணிகையில் கட்டுப்பாடு அறிவிக்க துவங்கவில்லை. இந்த கட்டுப்பாடு அறிவிக்க படுவதற்கு முன்னதகவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்கள் நிறைவு பெற்று உள்ளது. ஆகையால் அவர் இந்த கட்டுபாட்டை மீரியவர் ஆகமாட்டார்.


இது போன்ற இன்னும் அனேக ஆதாரங்களை நாங்கள் அந்த கட்டுரையில் உங்கள் முன் வைத்துளோம். இனியும் இந்த கருத்தை நீங்கள் தெரிவிக்க விரும்பினால், நாங்கள் எடுத்து வைத்துள்ள தெளிவான ஆதாரங்களுக்கு எதிரான தெளிவான ஆதாரத்தை எடுத்து வைத்து விட்டு, அதற்கு பின்னர் முயலுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.


-----------------------------------------------------------------------------------------------


3. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நபி தோழர்கள் மரணித்தால் விதவையாக்கப்பட்ட அவர்களின் மனைவிகளை நபி மணந்து மறுவாழ்வு அளிக்கலாம், ஆனால் நபி மரணித்தால் அவரின் மனைவிகள் (உம்முள் முமினிஈன் – முமினின் அன்னையர்) யாரும் மனக்கலாகாது.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள், உம்முள் மூமிணீன் - அனைவருக்கும் அன்னையர் என்ற தகுதியை, இறைவன் அருளுகிறான். அவர்கள் ஹதிஸ் அறிவிப்பாலர்களாக இருகிறார்கள். இன்னும் இஸ்லாமின் மேன்மையை அறிவிக்கும் வேலையை விரும்பி ஏற்று கொண்டுள்ளார்கள்.


மூமின்களின் அன்னையரை அடுத்தவர்கள் மணமுடிக்க தடுக்கபட்டதர்க்கு, பல காரணங்கள் இருந்த போதிலும் நடைமுறையில் எவன் ஒருவனும் தன்னுடைய அன்னையரை மணமுடிக்க முன் வரமாட்டார், என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இப்படி உலகத்தாருக்கெல்லாம் அன்னையாக கருதப் பெறும் ஒரு பெண்மணியை, ஒரு தனி நபர் திருமணம் முடித்து, இதன் முலம் அவள் உலகுக்கு அறிவிக்க இருக்கும் அமல்கள் அணைத்து மீதும் சந்தேகம் எழுப்புபுவதை தவிர்க்க இறைவன் இவ்வாறு கட்டளைகளை பணித்துள்ளான் என்பது தெளிவாக விளங்குகிறது.


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும்

கேள்வி:

உமர் எழுதியது: இஸ்லாமுக்காக அல்லாஹ்வுக்காக மனிதர்களை கொன்றால் உனக்கு சொர்க்கம் உண்டு, பெண்கள் (விபச்சாரம் செய்ய) கொடுக்கப்படுவார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டினால், இதற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் (அல்லது வேறு மார்க்க மக்கள்) இதனை மறுக்க வேறு ஆதாரத்தை கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. இது கேவலமாக இல்லையா?’ என்று ஒரு கேள்வியை கேட்டாலே போதும்.

இப்படி மனிதர்களை கொன்றால் பெண்களை இலவசமாக கொடுக்கும் இறைவன் ஒரு இறைவனா?’ என்று கேள்வியை கேட்டாலே போதும். இதற்கு நாம் ஆதாரத்தை காட்டத்தேவையில்லை. அனேக ஆதாரங்களை இன்னும் அவர்கள் தான் தரவேண்டும், மட்டுமல்ல, இப்படி பெண்களை கூட்டிக்கொடுக்கின்ற இறைவன் தான் உண்மையான இறைவன் என்று அவர்கள்(இஸ்லாமியர்கள்) தான் நிருபிக்கவேண்டும். எனவே, என்னுடைய கேள்விகள் இஸ்லாமியர்களின் ஆதாரங்கள் மீது உள்ளது.

By Anonymous on பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்... on 1/14/11


நம்முடையா விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, மேலே உள்ள கேள்வி / கருத்த்தில் திரு உமர் அவர்கள் முன்வைக்க விரும்பும் அபாண்டமான கருத்து/கூற்று.

1. இஸ்லாமில் அல்லாஹுக்காக மனிதர்களை கொன்றால் சொர்க்கம் உண்டு, பெண்கள் விபசாரம் செய்ய கொடுக்கபடுவார்கள்.

2. இப்படி கருத்தை தெரிவிக்க கிறிஸ்தவர்கள் ஆதாரம் கட்ட தேவையில்லை, (பொய் கூற்றுகளை) எதிர் கேள்விகளாக வைத்தாள் போதும். மனிதர்களை கொன்றால் பெண்களை இலவசமாக தரும் இறைவன் ஒரு இறைவன என்று ஆதாரத்தை (முன் வைக்காமல்) கேள்வியை கேட்டால் போதும்.

3. பெண்களை கூட்டி கொடுக்கின்ற இறைவன் தான் உண்மையான இறைவன் என்று இஸ்லாமியர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.


இனி நம்முடைய விளக்கத்தை பார்போம்:

உமரின் கருத்து/கூற்று :

1. இஸ்லாமில் அல்லாஹுக்காக மனிதர்களை கொன்றால் சொர்க்கம் உண்டு, பெண்கள் விபசாரம் செய்ய குடுக்கபடுவர்கள்.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் “கண் இருந்தும் குறுடர் காதிருந்தும் செவிடர்” நீங்கள் தான் என்று மீண்டும் மீ ண்டும் நீங்களே சாட்சி கூறுகிறீர்களே!!


“இறைவனுக்காக அப்பாவி மனிதர்களை கொன்றால் சொர்க்கம்” என்று பைபிள்ளில் படித்து (Number 31:17 – 35) அறிந்ததை, மாறாக குர்ஆனில் அறிவித்ததாக கற்பனை செய்து கொண்டு அறிவிக்கிறீர்களே? பைபிளில், இறைவன் சொல்வதை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்காக இந்த பழி பாவ செயலை செய்ய தூண்டி இருப்பாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா?


“பெண்கள் விபசாரம் செய்ய கொடுக்கப் படுவார்கள்” என்று பைபிளில் (Deuteronomy 20:13-14, Deuteronomy 21:11-14) அறிந்தீர்களா அல்லது குர்ஆனில் அறிந்தீர்களா?


பைபிள் தெளிவாக அப்பாவி மக்களை கொன்று குவியுங்கள் என்று பணிக்க, அடிமை பெண்களை கற்பளியுங்கள் என்று பணிக்க, அதை கண்டும் குருடராக இருந்து கொண்டு குர்ஆனை சாட முயற்சிக்கிறீர்களே?


குர்ஆன் “ஒரு அப்பாவியை கொள்வது மனித சமூகத்தையே கொள்வது போல்” என்று தெளிவாக அறிவிக்க, அதை மறைத்து உங்கள் கருத்தை நம்ப சொல்கிறீர்களா?

குர்ஆன் 5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்


உங்கள் வாதம் சரி என்று வைத்து கொண்டால், நாங்கள் “இஸ்லாம் சொல்வதை கண்ணை முடிக்கொண்டு நம்புபவர்கள்” என்று இதற்கு முன்னர், ஒரு கட்டுரையில், நீங்கள் தானே சொன்னீர்!! அப்படி என்றால் சொர்க்கம் செல்ல இப்படி ஒரு சுலபமான வழி இருக்க அதை மறுத்து நாங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்வழியில் நிற்க கஷ்டபடுவது ஏன்?


வாழ்நாள் முழுக்க உங்களை போல் சுகமாக வாழ்ந்து விட்டு, மரணம் நெருங்கும் வேளையில் ஒரு மனிதனை கொன்று விட்டு சொர்கம் செல்ல முடியாதா? அப்படியே ஒரு மனிதனை கொன்றால் உலகில் என்ன பெரிய தண்டனை கிடைக்க போகிறது? அதிக படியாக ஆயுள் தண்டனை, அதுவும் தலைவர்கள் பிறந்தநாள் என்று பல சலுகைகள் போக, எட்டு முதல் பத்து வருட சொகுசான சிறைவாசம். இதை சொர்கத்திற்க்கு பகரமாக அனுபவிக்க ஏதேனும் இஸ்லாமியன் தயங்குவனா?


“மனிதர்களை கொன்றால் சொர்க்கம்” என்ற உங்கள் கூற்று சரியானது என்றால், இதை செய்ய ஏன் இஸ்லாமியகள் முனைய வில்லை என்று விளக்க முடியுமா?


இதையே நாங்கள் அனைவரும் செய்ய துணிந்தால், நாங்கள் தலைக்கு ஒரு நபரை கொல்ல முனைந்து இருந்தாலும் இன்று இஸ்லாம் அல்லாதோர் உலகில் நிலைத்து இருக்க முடியுமா?


தனி நபர்களை விடுங்கள், இஸ்லாமிய ஆட்சி நாடுகள் ஏன் அடுத்தவர்களை கொள்ள யுத்தம் அறிவிக்க வில்லை, உங்கள் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது போல் அவர்கள் செய்ய ஏன் முனையவில்லை? அதிலும் அப்பாவி இஸ்லாமியர்களே கிறிஸ்தவ ஆட்சியாளர்களால் குறிவைத்து கொல்லப்படும் இன்றைய நிலையில் அவர்களை ஆதரித்து, அவர்களுக்காக எதிர் போர் ஏன் அறிவிக்கவில்லை? அவர்களுக்கு உங்கள் அளவுக்கு அறிவு கிடையாதோ என்று தோன்றுகிறது?


அடிமை பெண்களை கற்பழிக்க கூடாது என்பது பற்றிய நாங்கள் தெளிவான விளக்க கட்டுரை http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_15.html


இந்த முகவரியில் வரைந்து இருக்க, அதற்கு பதில் அளிக்காமல் உங்கள் பொய் கூற்றை மீண்டும் மீண்டும் நம்ப சொல்கிறீர்களே இதை தான் கிறிஸ்தவம் உங்களுக்கும் கற்று தந்ததா?



2. இப்படி கருத்தை தெரிவிக்க கிறிஸ்தவர்கள் ஆதாரம் காட்ட தேவையில்லை, (பொய் கூற்றுகளை) எதிர் கேள்விகளாக வைத்தாள் போதும். மனிதர்களை கொன்றால் பெண்களை இலவசமாக தரும் இறைவன் ஒரு இறைவனா என்று ஆதாரத்தை (முன் வைக்காமல்) கேள்வியை கேட்டால் போதும்.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, நீங்கள் என்ன போதிக்கிறீர்கள் என்று நீங்களே மறு முறை படித்து பாருங்கள். “நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவன் இல்லை” என்று நீங்களே பல முறை சாட்சி கூறுகிறீர்களே?

Exodus 20:16 You shall not give false testimony against your neighbor. Exodus 20:17 “You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, nor his male servant, nor his female servant, nor his ox, nor his donkey, nor anything that belongs to your neighbor.”


மேலே கோடிடப்பட்டுள்ள பைபிள் வசனம் / இறைவனின் கட்டளை, தெளிவாக “அந்நிய மனிதர்கள் மீது பொய்யுரைக்காதீர்கள்” என்று அறிவிக்க, அதற்கு மாறாக “அடுத்தவர் மார்கத்தை பழிக்க தெளிவான ஆதாரம் எடுத்து வைக்க தேவை இல்லை” என்று வாசகர்களுக்கு கற்று கொடுக்கிறீர்களே, இதை படிக்கும் ஒரு கிறிஸ்தவனேனும் உங்கள் கருத்தை நம்பி இப்படி தெளிவான ஆதாரம் இல்லாமல் அடுத்தவர்களை பழிக்க துணிந்தால் அவனை வழிதவற செய்த பாவம் உங்களை தொடராதா? இது தான் நீங்கள் கிறிஸ்தவத்தை நம்பும் முறையா?


நீங்கள் முன் வைத்த கேள்விக்கு மிகவும் தகுதியான கிறிஸதவர்களை பார்த்து முதலில் கேட்டுவிட்டு, பிறகு இந்த கேள்விகளுக்கு சிறிதும் தகுதியற்ற இஸ்லாமியர்களிடம் கேட்பதை பற்றி யோசியுங்கள்...


உங்களுடைய இந்த கருத்து தவறானது என்று நாங்கள் பலமுறை விளக்கியும், அதற்கு தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு தெரிவிக்காமல், உங்கள் பொய் கூற்றையே வாசகர்களை நம்ப வேண்டும் என்று என்னும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று உங்கள் மனசாட்சியை முதலில் கேளும்.



3. பெண்களை கூட்டி கொடுக்கின்ற இறைவன் தான் உண்மையான இறைவன் என்று இஸ்லாமியர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, இதற்கு முன்னர், “திருமணம் முடிக்காமல் பெண்களுடன் வாழ” பைபிள் பணிக்க, முறையே திருமணம் முடிக்க பெற்ற பெண்களை வைபாட்டிகள் என்று பழித்தீர்கள். “பெண்களை கற்பழித்துவிட்டு, கற்பழித்தவனுக்கு அவர் மேல் விருப்பம் இல்லையேல் துரத்தி அடிக்க” பைபிள் பணிக்க, அடிமைகளை கற்பளிபதை தடை செய்து முறையே “மஹார் இன்றி திருமணம் செய்ய” பணித்த இறைவனை இப்படி நா கூசும் வார்த்தையால் பழிக்கிறீர். இப்படிப்பட்ட உங்கள் உருவாகங்களை படிக்கும் பொழுது, நீங்கள் சுய நினைவோடு தான் கட்டுரை வரைகிறீர்களா என்று சந்தேகம் எழும்புகிறது.


பொது இடங்களில் எப்படி கட்டுரை வரைய வேண்டும், என்ற வரைமுறையை கூட அறியாமல் விரசமாக கட்டுரை வரையும் நீங்களா இஸ்லாமியர்களை பழிப்பது?


இவ்வாறு விரசமான கருத்து தெரிவிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களை சொல்லி குற்றம் இல்லை, இப்படி விரசமான கருத்துகளை முன் வைத்து கிறிஸ்தவத்தை சேர்த்தே இழிவு செய்ய உங்களை அனுமதிக்கும் / ஊக்குவிக்கும், அறியாமை கிறிஸ்தவர்களை தான் சொல்லவேண்டும்.


நீங்கள் கேட்ட கேள்வியை உங்களுக்கே திரும்ப கேட்கிறேன், நீங்கள் மேலே மொழிந்த விரசமான கருத்துக்கு தகுதியானது, பெண்களை கற்பழிக்க சொன்ன கிறிஸ்தவமா? அல்லாது முறையே திருமணம் முடித்து வீடு கூடா பணித்த இஸ்லாமா?


ஏன் கிறிஸ்தவ இறைவன் தான் உண்மையான இறைவன் என்று நிருபிக்க நீங்கள் கடமைப்பட்டவர் இல்லையா? அல்லது நீங்கள் உண்மையான கிறிஸ்தவர் இல்லையா?


பெண்களை கற்பழிக்க தெளிவான பல பைபிள் வசனங்கள் இருக்க (உதாரணமாக: Deuteronomy 20:13-14, Deuteronomy 21:11-14) அதை மறுக்க உங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கிறதா? இதை செய்த இறைவன் நீங்கள் அறிவித்த அந்த விரசமான காரியத்தை செய்தவன் இல்லையா? விளக்கம் தாருங்களேன் ...


இது வரை நாம், இஸ்லாமியர்கள் தான் திரு உமர் அவர்களின் ஆதாரம் இல்லாத பொய் கூற்றுக்கு தெளிவான ஆதாரம் எடுத்து வைக்குமாறு கேள்விகள் எழுப்பிகொண்டு இருந்தோம். இப்பொழுது உண்மை கிறிஸ்தவர்களும் நம்முடன் தோல் சேர்த்து திரு உமரிடம் தெளிவான ஆதாரத்தை கேட்க துவங்கி இருப்பது மிகவும் வரவேற்புக்கு உரிய செயலாகும்.


தன் மார்க்கம் உண்மையானது என்று நம்பும் எவனும், தன் மார்கத்தின் பெயரில் அடுத்தவர் மார்கத்தை பொய் கூற்றுகள் கொண்டு இழிவு செய்வதை அனுமதிக்காமல் அதற்கு தக்க ஆதாரம் கேட்க முயல்வது மனித இயல்பு. தன் மார்கத்தை முழுமையாக அறியாமல், அடுத்தவர் மார்கத்தை இழிவு செய்கிறேன் என்ற போர்வையில், எவரேனும் தன் மார்கத்தை சேர்த்தே இழிவு செய்வனேயானால், இந்த செயலை எந்த ஒரு நல்ல ஆத்மாவும் பொறுக்காது. இதையே உமருக்கு ஏதிராக கேள்வி எழுப்ப முயன்ற நமது கிறிஸ்தவ நண்பர் செய்ய முயன்றுள்ளார், அவ்வாறின் இந்த செயலை நாம் வாழ்த்தி வரவேற்போம்.


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


-

-


4 comments:

PAWRA said...

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரகுமா துள்ளஹி வ பரகதுஹு

வீணாக வாதிட்டு வாங்கி கொண்டார் திரு உமர்.
இன்றைய அதி நவீன உலகில் இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல படிகிறது. மாஷா அல்லா !!
இன்சா அல்லா வரும் ஆண்டில் primary பள்ளி பிள்ளைகளிடமும் இஸ்லாம் வழியில் சட்டம், அறிவியல், வாழ்க்கை முறை, அனைத்தும் விளக்கமாக சொல்வார்கள். ஆமீன்.
இப்படி இருக்க உமர் போன்ற போலியானவர்கள் என்ன செய்ய முடியும் ..
அல்லாஹு அக்பர் ..வெற்றியும் பக்கம் வாருங்கள் !!!
- Walid

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,

இந்த பின்னி பெடலெடுப்பது என்பது இதுதானோ? தலை குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ன்னு நீங்க உமரண்ணனை பார்த்து கேட்பது வீண், ஏன்னா ஒன்னு மீசை இருக்கிறவனை பார்த்து கேட்கணும் அல்லது மீசை முளைக்கும்னு நம்பிக்கை இருக்கிற ஆளை பார்த்து கேட்கணும். ரெண்டு கெட்டானை பார்த்து கேட்டால் எப்படி?

வடிவேலு டயலாக்கில் சொல்லனும்னா இப்படி எல்லோரும் உசுப்பேத்தி விட்டதின் விளைவு, உமரண்ணன் அனுபவிக்கிறார். பாவம் அவரும் என்ன செய்வார், அவர் ஒரு அறிவு ஜீவி ன்னு அல்லக்கைகள் எல்லாம் துதி பாடி ஏத்தி விட்டதின் விளைவு.

தொடரட்டும் உங்கள் சேவை, மேலும் தமிழ்கிறிஸ்தவர்கள் தளத்திலும் (மார்ஸ் மேடை) நீங்கள் பங்கு எடுத்து கொள்ளலாமே.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடைய சேவைக்கு தக்க கூலி கொடுத்து அருள் புரிவானாக.

Regards,
Mist(Naya)

abu abdhullah said...

அசலாமு அலைக்கும்

சகோதரர்களே சமீப காலமாகத்தான் உமருடைய isa koran னில் பார்த்தேன் அதற்க்கு விளக்கம் அளிபதர்க்காக நான் என்னுடைய பிளாக்கரில் எழுத நினைத்தேன் மாஷா அல்லா உங்களுடைய தளத்தை பார்வை இட்டேன் அல் ஹம்துலில்லாஹ் நான் கிருத்தவ குடும்பத்தில் பிறந்து இந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டேன் towardthe-light.blogspot.com இது என்னுடையது. இன்ஷா அல்லா உங்கள் பணி சிறக்க எல்லவல்ல ஏக இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் நம்மிடம் சத்தியம் உள்ளது .

abu abdhullah said...

அசலாமு அலைக்கும்

சகோதரர்களே சமீப காலமாகத்தான் உமருடைய isa koran னில் பார்த்தேன் அதற்க்கு விளக்கம் அளிபதர்க்காக நான் என்னுடைய பிளாக்கரில் எழுத நினைத்தேன் மாஷா அல்லா உங்களுடைய தளத்தை பார்வை இட்டேன் அல் ஹம்துலில்லாஹ் நான் கிருத்தவ குடும்பத்தில் பிறந்து இந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டேன் towardthe-light.blogspot.com இது என்னுடையது. இன்ஷா அல்லா உங்கள் பணி சிறக்க எல்லவல்ல ஏக இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் நம்மிடம் சத்தியம் உள்ளது .