Wednesday, November 10, 2010

பன்றியின் மாமிசம் - ஈசா உமரின் கருத்து என்ன?

பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று கிறிஸ்தவர்கள் கூறி வரும் போது,


பன்றியின் மாமிசத்தை உண்ணலாம் என்பதற்கு கீழ் வருமாறு விளக்கம் அளித்துள்ள
ஈசா உமர் இதன் மூலம் என்ன சொல்ல முயல்கிறார் ?

அவர் இவ்வாறு எழுதுகிறார் "இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல."

"இந்த தடையானது எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டதல்ல" என இவர் கூறுகிறார். அப்படி என்றால் இந்த தடை எந்த மக்களுக்கு விதிக்கபட்டது ?

"இந்த தடையானது எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும் விதிக்கப்பட்டதல்ல" என இவர் கூறுகிறார்.
அப்படி என்றால் இந்த தடை எந்த காலத்தில் வாழ்பவர்களுக்கு  விதிக்கபட்டது ?


இப்படி முதல் பக்கத்தில் "பன்றியின் மாமிசம்" என்று ஆரம்பித்துவிட்டு  கேள்விகளை மட்டும் எழுப்பி, பின்னர் அந்த தலைப்பையே மறந்துவிட்டார் போலும் !!!


படிப்பவர்களை குழப்பிவிட்டுவிட்டு தன்னையும் குழப்பிகொல்கிறார் !!!


அவரது இணையத்தளத்தில் என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்கள். இதை அவர் வெகுவிரைவில் இணையத்தில் இருந்து நீக்கிவிடக்கூடும். அகவே தான் இதை இமேஜாக இங்கே வெளியிடுகிறேன்.

மேலும் படிக்க: http://isakoran.blogspot.com/2009/03/part-1.html

7 comments:

Anonymous said...

very good
பைபிளில் ஒட்டக மாமிசம் உண்பதும்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இதை உங்கள் அரபுக்கள் சாப்பிடுவது ஏன் என்று விளக்குவீர்களா?

இன்ஷா அல்லாஹ் விளக்குவீர்கள் என விடைபெறுகிறேன்.

Apsar said...

ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.......

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.......

திரு அனானிமஸ் அவர்களே, நீங்களே அதை பைபிளில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறியுள்ளீர்கள். இதை நீங்கள் கிறிஸ்தவர்களிடம் அல்லவா விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் !! இருப்பினும் உங்கள் கேள்விக்கு மரியாதையை கொடுக்கும் முகமாக நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

ஒட்டகத்தின் மாமிசத்தை உண்பதற்கு பைபிள் தடை செய்ததற்கான காரணம் என்ன?

பைபிளின்படி விலங்குகளில் குளம்புகள்(hooves) இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் மற்றும் அசைபோடுகிறதும் உண்பதற்கு தடை இல்லை. அதிலும் ஒட்டகம் உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், "அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை"

இப்படி கூறும் பைபிளின் வாசனைகள்:

Deuteronomy 14:6 You may eat any animal that has hooves divided and that chews the cud. 14:7 However, you may not eat the following animals among those that chew the cud or those that have divided hooves: the camel, the hare, and the rock badger. Although they chew the cud, they do not have divided hooves and are therefore ritually impure to you.

உபாகமம் - 14 அதிகாரம்
6. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;
7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

Leviticus 11:1 The Lord spoke to Moses and Aaron, saying to them, 11:2 “Tell the Israelites: ‘This is the kind of creature you may eat from among all the animals that are on the land. 11:3 You may eat any among the animals that has a divided hoof and that also chews the cud. 11:4 However, you must not eat these from among those that chew the cud or have divided hooves: The camel is unclean to you because it chews the cud even though its hoof is not divided.
1. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்க
2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்
4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Apsar said...

மேலேயுள்ள பின்னூட்டத்தின் தொடர்ச்சி.......

மேற்கூறப்பட்ட வசனங்களின்படி குளம்புகள் இரண்டாகப் பிரிக்கபடாததுமான மற்றும் அசைபோடுகிறதுமான ஒட்டகைகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது
இதற்கு ஏக இறைவன் அல்லாஹ் குர்-ஆனில் ஸூரத்துல் காஷியா - வசனம் 17 லில்

Allah said in the holy Quran Sura. Al-Ghosyiyah 17
17. Do they not look at the Camels, how they are created?

17. ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று
அல்லாஹ் சுபகனவதள நீங்கள் ஒட்டகங்களை பார்கவில்லையா என்று கேட்கிறான்?. அது குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதா மற்றும் அசைபோடுகிறதா ? நீங்கள் கூகுளில் தேடினால் ஒட்டகைக்கு குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறது என்று எளிதாக கண்டுபிடித்து விடலாம்

பைபிளின்படி ஏசு கூறுகிறார்,

According to bible Jesus said John 16:12 I have yet many things to say unto you, but ye cannot bear them now. 16:13 Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come. 16:14 He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you.

யோவான் - 16 அதிகாரம்
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

நபி ஈஷா (அலை) சொல்லாமல் விட்டு சென்ற சட்டங்களை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். உதரணமாக அடிமைத்தனம்,வட்டி, ஏழை வரி (zakat), விவாகரத்து, திருமணம், சொத்து பகிர்மான சட்டங்கள்,போர் சட்டங்கள் போன்ற பல....

ஆகவே குர்-ஆனின்படி பன்றியின் மாமிசம் உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. உண்பதற்கு அனுமதிக்க பட்ட உணவுகளில் ஓட்டகையும் ஒன்று

அப்படியும் நீங்கள் ஒட்டகை உண்பதற்கு பைபிள் தடை செய்துள்ளது என்று கூறினீர்களேயானால்., நாங்கள் முஸ்லிம்கள், மாற்றப்பட்டுவிட்ட (corrupt) பைபிளை நம்புபவர்களில்லை. நாங்கள் நம்புவது ஈசா(அலை) நபியின் உண்மையான வேத புத்தகத்தையே (அது இப்போது மாற்றப்பட்டுவிட்டது / அதன் உண்மையான நிலையில் இப்போது இல்லை), நாங்கள் மார்க், லூகா, மதேவ், ஜான் ஆகியோரால் எழுதப்பட்டதை இறைவேதம் என்று நம்பமாட்டோம்.

உங்களது கேள்விக்கு விடையளித்துவிட்டேன் என நம்புகிறேன்.......

உங்கள் மீது ஏக இறைவன் சந்தியும் சமாதானமும் உண்டாவதாக.....

Anonymous said...

என்ன ஐயா இப்போது பைபிளிலிருந்து ஒட்டகமாமிசம் புசிப்பதற்கு தடை சொல்லப்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு குர்ஆன் அனுமதித்தாக புதுக்கதை விடுகிறீர்.

பைபிள் மாற்றப்பட்டிருந்தால் எங்கே மாற்றப்பட்டுள்ளது.

குர்ஆன்தான் மாற்றப்பட்டுள்ளதாக ஹதீஸ்களே கூறுகின்றன.

Anonymous said...

மேற்கூறிய வசனங்கள் போதி்ப்பது எனன என்று விளக்குவீர்களா?

APSAR said...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

பைபளில் பன்றியை உண்பதை தடை செய்யப்படுள்ளது ஆனால், "இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல." என்பது திரு உமர் அவர்களின் கருத்து..
எங்களுடைய கருத்து: பைபளில் பன்றியை உண்பதை தடை செய்யப்படுள்ளது, இந்த தடையை நபி ஈஸா (ஸல்) வோ, அல்லது அவரின் 12 அபோச்ட்லேவோ தான் வாழ்நாளில் நீக்கியதாக அறிய முடியவில்லை. பாவுல் (சாவுல்) தான் மக்களை எந்த தடையும் அன்றி எதையும் உண்ண பணிகிறார்.
பைபளில் உணவை அசைபோடும், கால்களின் குழம்புகள் இரண்டாக பிரிந்து இல்லாத ஒட்டகத்தை உண்ண தடை செய்கிறது, ஆனால் தற்பொழுது உள்ள ஒட்டகம் உணவை அசை போடும் + கால்களில் குழம்புகள் இரண்டாக பிரிந்து இருக்கும் வண்ணமே உள்ளது, எனவே அதை உண்ண பைபிளில்லும் குர்ஆன்னிலும் அனுமதி வழங்கப்பட்டே உள்ளது...
அஸ்ஸலாமு அழைக்கும்

அபூ ஷபீக் said...

உபாகமம் - 14 அதிகாரம்
6. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;
7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

அன்பு கிறித்தவ நண்பரே ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கடவுளின் வார்த்தை என்று மார்தட்டும் பைபிளின் உபாகமத்தின் இந்த வசனத்தை படித்து பாருங்கள்.

வசனம் 7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும்

ஒரேவசனத்தில் முரண்பாடு உள்ள ஒரே புத்தகம் உலகில் பைபிள் ஆகத்தான் இருக்க முடியும். இந்த வசனத்தின் படி ஒட்டகம் என்பது அசைபோடும் விரிகுலம்புள்ள விலங்கு ஆகும்.அதற்கு அடுத்த வார்த்தையிலேயே அவைகள் அசை போட்டும் விரிகுளம்பில்லையாம்.

நண்பரே சிந்தியுங்கள் இது கர்த்தரின் வார்த்தைய இல்லை , மனிதனின் உளறலா?