Wednesday, April 6, 2011

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அவர்கள் அன்பை போதிப்பவர் என்ற மாயயை பரப்ப முயல்வது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அகிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் 3 இப்பொழுது வெளியிடுகிறோம்.


திரு உமர் அவர்களே, பைபிளின் ஏசு அவர்கள் அஹிம்சையை போதித்தார்கள் என்று உங்கள் கட்டுரைகளில் நீங்கள் அறிவிக்க விரும்புகிறீர்கள், ஆனால் இதற்கு முற்றிலும் எதிரான வரலாற்றை பைபிள் அறிவிக்கிறது. பைபிளில் திரு ஏசு அவர்கள் தன் சீடர்களிடம் தன் ஆடைகளை விற்றாவது போர்வாள் கொள்முதல் செய்ய பரிந்துரைத்த வசனம் இதோ:

Luke 22:35 and he-said to-them when I-commission You minus of-purse and of-bag(beggar’s) and of-sandals no of-any ye-want the yet they-said of-not-yet-one 22:36 he-said them to-them but now the one-having purse let-him-lift like-as and bag(beggar’s) and the-one no having let-him-sell the cloak of-him and let-him-buy sword 22:37 i-am-saying her to-you that still this the having-been-written is-binding to-be-being-finished in me the-one and with un-laweds is-accounted and for the about me finish is-having



திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:

1

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், அஹிம்சையை போதித்தார்கள் என்ற உங்கள் கூற்றை ஏற்போம்மேயானால், பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தில், திரு ஏசு அவர்கள், எதற்காக தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்தார் என்பதை, பைபிளின் தெளிவான வசன ஆதாரம் கொண்டு எங்களுக்கு தெரிவிக்க முடியுமா?


2

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், அன்பே உருவானவர் என்ற உங்கள் கூற்றில் கடுகளவும் உண்மை இருக்குமேயானால், அவர் தன்னை தர்காத்துக் கொள்ள போர்வாள் கொள்முதல் செய்ய அவசியம் என்ன?


போர்வாளின் உதவி இல்லாமல் தன்னை தர்காத்துக் கொள்ள வல்லமை அற்ற இறைவனா உங்கள் இறைவன்?


3

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், தன்னை தற்காத்துக் கொள்ள போர்வாள் கொள்முதல் செய்ய வில்லை என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால், தங்கள் ஆடையை விற்று போர்வாள் கொள்முதல் செய்த தன் சீடர்களை ஏசு பணிக்க என்ன அவசியம் நேரிட்டது?


4

திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்ய பண்ணிக்கவில்லை, இது பிழையான மொழிபெயர்ப்பு என்று ஏனைய கிறிஸ்தவர்கள் வாதத்தை நீங்களும் முன் வைக்க விரும்பினால், திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்தார்கள் என்றும், அதை கொண்டே திரு பீட்டர் அவர்கள் ஏசு அவர்களை கைது செய்வதற்காக வந்த அடிமையின் காதுகளை வெட்டினார் என்று பைபிள் அறிவிக்கும் வசனம்:

Luke 22:49 When those who were around him saw what was about to happen, they said, “Lord, should we use our swords?” 22:50 Then one of them struck the high priest’s slave, cutting off his right ear.



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் அறிவிக்கபடும் நபர் திரு பீட்டர் அவர்கள் அல்ல என்று வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், இவ்வாறு போர்வாள் உதவி கொண்டு ஏசுவை கைது செய்வதற்காக வந்த அடிமையின் காதுகளை வேட்டியது, திரு பீட்டர் அவர்கள் தான் என்று அறிவிக்கும் பைபிள் வசனம்:

John 18:10 Then Simon Peter, who had a sword, pulled it out and struck the high priest’s slave, cutting off his right ear. (Now the slave’s name was Malchus.) 18:11 But Jesus said to Peter, “Put your sword back into its sheath! Am I not to drink the cup that the Father has given me?”



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட நிகழ்வுக்கு பிறகும், திரு ஏசு அவர்கள், திரு பீட்டர் அவர்களின் போர்வாளை தூக்கி எறிய பரிந்துரைக்கவில்லை. இதற்கு மாறாக மேலே கோடிட்ட வசனத்தில் போர்வாளை அதற்கு உரிய உரையுனுள் வைத்துக்கொள்ளும் படி பணிக்கிறார். இது அஹிம்சையை போதிக்கும் முறையா?


5

திரு உமர் அவர்களே, Luke 22:36 வசனத்தில் வரும் போர்வாள் என்பது உண்மையான போர்வாள்களை குறிக்கவில்லை, மாறாக அது பிரிவினையை குறிக்கிறது, என்று ஏனைய கிறிஸ்தவ அறிஞர்களின் வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், இரண்டே போர்வாள் இருக்கிறது என்று ஏசுவின் சீடர்கள் விடை அளித்ததையும், அது போதுமானது என்று திரு ஏசு பதில் அளித்ததையும், நீங்கள் இன்னும் ஒரு முறை படிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டு கொள்கிறோம்.


அது உண்மையான போர்வாள் அல்ல என்றால் எதற்காக திரு ஏசு அவர்களின் சீடர்கள் இரண்டே உள்ளது என்று அறிவித்தார்கள்?


அண்டங்களை எல்லாம் அறிந்த இறைவன் என்று திரு ஏசு அவர்களை புகழ விரும்பும் நீங்கள், தன் சீடர்கள் வைத்து இருக்கும் போர்வாள் பற்றி திரு ஏசு அவர்களுக்கு ஞானம் இல்லை என்ற வாதத்தை அறிவிக்க போகிறீர்களா?


6

திரு உமர் அவர்களே, பைபிளின் திரு ஏசு அவர்கள் வன்முறையை விரும்பவில்லை என்ற உங்கள் கூற்றில் கடுகளவேனும் உண்மை இருக்குமேயானால், போர்வாள் ஏந்தி நிற்கும் தன் சீடர்களிடம் இதற்கு முன்னரே அவர் இதை தெளிவாக அறிவித்து இருக்க வேண்டாமா?


திரு ஏசு அவர்கள், தன் என்னத்தை முன்னமே தெளிவாக அறிவித்து இருந்தால், இந்த நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் அல்லவா? திரு ஏசு அவர்களின் என்னத்தை அவரது சீடர்கள் முன்னமே அறிந்து இருந்தால் அதை தாண்டி நடக்க முயன்று இருப்பார்களா? இதன் அடிப்படையில் திரு பீட்டர் அவர்கள் திரு ஏசு அவர்களின் பரிந்துரையை ஏற்காமல் வன்முறையில் இறங்கினார் என்று அறிவிக்க விரும்புகிறீர்களா?


திரு பீட்டர் அவர்கள், இவ்வாறு வன்முறையில் இறங்குவார் என்பது உங்கள் இறைவன் அறியாததா?


திரு ஏசு அவர்கள் இந்த நிகழ்வை முன்னரே தடுக்க முயன்று இருக்க வேண்டாமா?


7

திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்ய தன் சீடர்களை பணித்தார். அது அவரை பற்றிய பழைய ஏற்பாட்டின் முன் அறிவிப்பை மெய் படுத்துவதற்காக கொள்முதல் செய்யப்பட்டது என்ற பிற கிறிஸ்தவ அறிஞ்சர்களின் வாதத்தை நீங்களும் முன் வைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் முன் அறிவிப்பு என்பது திட்டமிட்டு பின்னப்படும் வளை போன்றதா? அது எல்லாம் வல்ல இறைவனின் விருப்பதிற்கேர்ப்ப நடைபெறும் நிகழ்வு கிடையாதா?


இதற்கு முன்னரே பைபிளில் முன் அறிவிப்பு செய்யப்பட்ட, வர விருக்கும் தீர்க்கதரிசியின் முன் அறிவிப்புகள், தன் செயல்களுடன் ஒத்து இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னரே திட்டமிட்டு, திரு ஏசு அவர்கள் தன் செயல்களை அமைத்து கொண்டார் என்று நீங்கள் அறிவிக்க விரும்புகிறீர்களா?


இது ஏமாற்று வேலை இல்லையா?


கண் கட்டி விதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா?




திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்களையா அன்பே உருவானவர், அஹிம்சையை போதித்தவர் என்று அழைக்க விரும்புகிறீர்கள்?


திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்கள், அஹிம்சையை போதிக்க வில்லை என்பதை இந்த கட்டுரை மூலம் உங்களுக்கு நாங்கள் தெளிவாக்கி இருப்போம் என்று நம்புகிறோம்.


திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் தன்னுடைய முப்பத்திமுன்று வயதில், வெறும் பன்னிரெண்டு சீடர்கள் கொண்டிருந்த நிலையில், அந்த பன்னிரெண்டு சீடர்களும் திரு ஏசு அவர்களின் கொள்கைகளை சரிவர கடைபிடிக்காத நிலையில், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களுக்கு உலகின் எந்த சாம்ராஜியத்தையும் ஆளும் வல்லமையை தந்திராதா நிலையில், திரு ஏசு அவர்கள் தம் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்ததை நாம் இந்த கட்டுரையில் காண நேறிற்று. இதன் அடிப்படையில், திரு ஏசு அவர்கள் இன்னும் சிறிது காலம் பூவுலகில் வாழ்ந்து இருந்தால், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களின் ஆள்மையின் கீழ் சாம்ராஜியங்களை தந்து இருந்தால், திரு ஏசு அவர்கள் பைபிளின் ஏனைய தீர்க்கதரிசிகள் செய்தது போல் யுத்தங்கள் செய்து ஒன்றும் அறியா பாமரமக்களை கொன்று குவித்து இருப்பார், என்பது நமக்கு இந்த கட்டுரை மூலம் தெளிவாகிறது. இது திரு ஈஸா (அலை) அவர்களை பற்றி பைபிள் அறிவிக்கும் பொய்யான வரலாறு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்???


திரு உமர் அவர்களே, நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்

Tuesday, April 5, 2011

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு ...


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அன்பை போதிப்பவர் என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்றும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.


திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் 2 இப்பொழுது வெளியிடுகிறோம்.


திரு உமர் அவர்களே, உலகில் உள்ள எல்லா கனி வகைகளும் பெறும் பாலும், அதன் காய் காய்க்கும் தவணை மற்றும் பருவ நிலைக்கு ஒப்பவே மாறுபடும். ஒரு மரம் அதற்கு உரிய தவணை மற்றும் பருவ நிலை அடையும் பொழுதே காய் காய்கிறது. இந்த தவணையை விடுத்து ஏனைய பருவ காலங்களில் அவை காய் காய்ப்பது இல்லை என்பது மானிடர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இதற்கு மாறாக நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், ஒரு அத்தி பழ மரம், அதன் பருவ நிலைக்கு ஏற்பவே காய்க்கும் என்பதை அறியாமல், அத்தி பழம் காய்க்கும் பருவ காலம் அல்லாத காலத்தில், தன் பசிக்கும் புசிக்க அத்தி மரத்தில் பழம் காய்க்காத காரணத்தினால், அதை சபித்து அழித்ததாக பைபிள் அறிவிக்கும் தெளிவான பைபிள் வசனம்:

Matthew 21:18 Now early in the morning, as he returned to the city, he was hungry. 21:19 After noticing a fig tree by the road he went to it, but found nothing on it except leaves. He said to it, “Never again will there be fruit from you!” And the fig tree withered at once



திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:

1

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக வணங்கும் ஏசுவுக்கு மற்ற சாதாரண மனிதர்களை போல பசி எடுத்தது ஏன்? மற்றவரின் நோய்களை குண படுத்த முடிந்த ஏசுவுக்கு தன் பசியை உணவின்றி தீர்க்க முடியாதது ஏன்?


2

திரு உமர் அவர்களே, மற்றவரின் நோய்களை கண் இமைக்கும் நேரத்தில் குணப்படுத்த முடிந்த ஏசுவுக்கு அந்த மரத்தின் கனிகளை தானாக உண்டுபண்ண செய்ய முடியாதது ஏன்?


3

திரு உமர் அவர்களே, தானாகவே வளர்ந்து, தன் பருவ கால தவணைகளில் காய் கனிந்து, எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கு உணவளித்து கொண்டு இருந்த ஒரு அத்தி பழ மரத்தை, தனக்கு பசிக்கும் வேளையில் பழம் காய்க்காத காரணத்தினால், சாபமிட்டு அழித்த திரு ஏசு அவர்களின் ஈவு இரக்கமற்ற இந்த செயலை, எதை அடிப்படையாக கொண்டு ஏற்க நீங்கள் முன் வருகிறீர்கள் என்று எங்களுக்கு கொஞ்சம் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க முடியுமா? இது ஒன்றே போத வில்லையா அவர் இறைவன் அல்ல ஒரு இறைத்தூதர் என்பதை உணர?


4

திரு உமர் அவர்களே, உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், திரு ஏசு அவர்கள் இறைவன் என்றால், எந்த தவறும் இழைக்காத ஒரு அத்தி மரத்தை சாபமிட்டு அளிப்பது ஒரு நல்ல இறைவனுக்கு அழகா?


5

திரு உமர் அவர்களே, மனிதர்களை கொள்வதை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்வீர்களா? ஏன் மரங்களுக்கு வலிகளை உணரும் தன்மை உள்ளது என்பது நீங்கள் அறியாததா?

http://www.department13designs.com/vegan.html

http://en.wikipedia.org/wiki/Plant_perception_(paranormal)


6

திரு உமர் அவர்களே, ஒரு மரத்தை நட்டு அதை கனிய செய்வதில் உள்ள சிரமத்தை அறிய வேண்டும் என்றால் அதை நட்டு வைத்து பாதுகாத்து வளர்த்த விவசாயி இடம் சென்று வினவினாலே போதும். இன்னும் அதிக படியாக விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மரங்களை, தாங்கள் ஈன்றேடுத்த பிள்ளைகளை காட்டிலும் பரிவன்புடன் வளர்ப்பார்கள். அப்படி கடின உழைப்பின் பயனாக வளர்ந்து நிற்கும் ஒரு மரத்தை தக்க காரணம் இன்றி அளிக்க நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது?


7

திரு உமர் அவர்களே, உங்கள் ஏசு அவர்களின் கோபத்திற்கு ஆளான ஒரு அப்பாவி மரத்தை பற்றி மட்டுமே இந்த கட்டுரையில் விவரித்துள்ளோம். இவ்வாறு கணக்கில் வராமல் அவர் கோபத்திற்கு ஆளான இன்னும் எத்தனை மரங்கள் உள்ளது என்று எங்களுக்கு கணக்கெடுத்து தருமாறு கிறிஸ்தவ அறிஞ்சாரக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் உங்களிடம், இந்த கட்டுரை மூலம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.




திரு உமர் அவர்களே, இன்றைய உலக சூழ்நிலையில் மர வளர்ப்பின் அத்தியாவசியத்தை நீங்கள் நன்கு அறிந்திர்பீர்கள் என்று நம்புகிறோம். இப்படி மனிதனே மரங்களின் அத்தியாவசியத்தை உணர்த்து மரவளர்ப்பு திட்டங்களை வகுக்கும் நிலையில், நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், தொலை தூற நோக்கத்தோடு மர வளர்ப்பை போற்றி அல்லவா இருக்க வேண்டும்? இதற்க்கு மாறாக அவரே இவ்வாறு மரங்களை அழிக்க முனைந்தது ஏன்?


திரு உமர் அவர்களே, தக்க காரணம் அன்றி, இது போன்று பொது உடமைகளை, மரங்களை அழிப்பவர்களை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது (அல் குர்ஆன் 2:204-206), இவர்களை பசாது செய்பவர்கள் என்று அழைக்கிறது. இன்னும் அதிக படியாக அன்னல் நபி திரு முஹம்மத் (ஸல்) அவர்கள், மர வளர்ப்பை போற்றியுள்ளார்கள், இன்னும் அதிகபடியாக, மர வளர்ப்பு என்பது முடிவில்லாத தான தர்மம் செய்வதற்கு இணையான கூலியை பெற்று தரும் என்று பரிந்துரைத்து உள்ளார்கள்.

Bukhari 2320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).

Volume :2 Book :41

Sahih Muslim Book 010, Number 3764:

Jabir (Allah be pleased with him) reported Allah's Messenger (may peace be upon him) as saying: Never a Muslim plants a tree, but he has the reward of charity for him, for what is eaten out of that is charity; what is stolen out of that, what the beasts eat out of that, what the birds eat out of that is charity for him. (In short) none incurs a lose to him but it becomes a charity on his part.



திரு உமர் அவர்களே, மரம் வளர்ப்பது அத்தியாவசிய தேவையாகிய இன்றைய சூழ்நிலையில், செழித்து வளர்ந்த மரத்தை தன் சொந்த விருப்பதிற்காக சாபமிட்டு அழித்த பைபிளின் திரு ஏசுவை காட்டிலும், மரவளர்பை ஒரு புண்ணியமாக போதித்து அதன் மூலம் மக்களை உலகிற்கு நன்மை செய்ய தூண்டிய திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், மேன்மையானவர் என்பது இந்த கட்டுரை மூலம் தெளிவாகி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்