Friday, November 25, 2011

பைபிள் முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா? கேள்வி – பதில் பகுதி தொடர்ச்சி



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


பைபிள் முரண்பாடு கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா? கேள்வி பதில் பகுதி தொடர்ச்சி:

வாசகர்களே, நமது கிறிஸ்தவ நண்பர் திரு கொல்வின் அவர்கள் நம்மிடம் மீண்டும் சில  எதிர் கருத்துகளை கேள்விகளை எழுப்பி உள்ளார். அவை இதோ:
  

colvin said...
\\முன்னரே சொர்க்கத்தில் மனிதனுக்கு சரீரம் இருந்தது, அதன் விலா எலும்பை எடுத்தே அவனின் மனைவி படைக்க பெற்றால் என்று அறிவிப்பதை கண்டு இருப்பீர்கள்.//
இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்பது பைபிள் வாக்கு. இப்படியிருக்க மாமிசமும் இரத்தமும் உடைய மனிதனை அங்கு படைத்தார் என்பதும் சொர்கத்திலே பல அடிகளுடைய மனிதனை படைத்தான் என கப்ஸா விடுவதும் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா? அப்படின்னா அவன் பூமிக்கு சிறக்கு வைத்து பறந்தா வந்தான். உண்பதும் குடிப்பதும் கிறிஸ்த பரலோகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்த இடத்தில் படைத்தார் என்தை பைபளிள் குறிப்பிடவில்லை. ஆயினும் ஆதியாகமத்தை வாசிக்கும்போதும் பூமியிலேதான் உண்டாக்கினார் என்பது தெளிவு. செங்கொடியின் தளத்திற்கு சென்று இது தொடர்பாக பதிவு ஒன்று உள்ளது. அதற்கும் பதில் அளித்துவிட்டு வாருங்கள். நான் கேட்ட 100 தாய் தந்தையர் பதிவுக்கு பதில் எங்கே சும்மா எழுத வேண்டும் என்பதற்கhக எதையாவது எழுதி கொட்ட வேண்டாம். தெளிவான பதில் தேவை.



colvin said...
பொதுமொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவியுங்கள். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் ஏராளமான முரண்பாடுகள உள்ளன. அனுமதித்தால் அவற்றினை தரலாம். அவற்றில் எது சரி என உங்களால் சொல்ல முடியுமா?


  
திரு கொல்வின் அவர்கள் கருத்துகளுக்கு/கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்னர் திரு கொல்வின் அவர்களையும் இன்னும் இதை போன்று நம்மிடம் எதிர் கருத்துகள்/கேள்வி எழுப்ப விரும்பும் கிறிஸ்தவ வாசகர்களுக்கு நாம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம். அதாவது நாங்கள் விளக்கம் அளிக்கையில், எங்கள் சொந்த விளக்கங்களை மட்டுமே முன் வைப்பது இல்லை, மாறாக தெளிவான பைபிள், திரு குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை முன் வைத்து விளக்கம் அளிக்க முனைகிறோம். ஆனால் எங்களுக்கு பதில் அளிக்க நீங்கள் முயலும் வேளைகளில் பெரும்பாலும் உங்கள் சொந்த கருத்துகளை பைபிள் விரிவுரைகளாக தருகிறீர்களே அன்றி, தெளிவான பைபிள் வசனங்களை கொண்டு மறுப்பு அளிக்க மறுக்கிறீர்கள். இன்னும் அதிகப்படியாக எங்கள் இணையதளம் போலியானது என்பது போன்ற கூச்சல்களை வேறு இணையதளங்களில்  எழுப்புகிறார்கள். இது முறையா???

இப்படி நீங்கள் செய்ய விரும்பினால், நாங்கள் அளிக்கும் ஆதாரம் போலியானது, அல்லது எங்கள் கருத்து போலியானது என்று தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விளக்கம் அளித்துவிட்ட பின்னர் தானே இவ்வாறு அறிவிக்க வேண்டும்!! இதை விடுத்து புற முதுகில் குத்துவதில் சந்தோசம் கொள்வது கிறிஸ்தவத்திற்கே உரிய பாணியா??? இனி வரும் காலங்களில் கிறிஸ்தவ வாசகர்கள் பைபிள் தெளிவான வசனங்களை முன் வைத்து விளக்கம் அளிக்க முயல்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம்.


1
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்பது பைபிள் வாக்கு. இப்படியிருக்க மாமிசமும் இரத்தமும் உடைய மனிதனை அங்கு படைத்தார் என்பதும் சொர்கத்திலே பல அடிகளுடைய மனிதனை படைத்தான் என கப்ஸா விடுவதும் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா?



நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்பது பைபிள் வாக்கு என்று அறிவிகிறீர்கள். பைபிளை ஒரு முறையேனும் முழுமையாக படித்தது உண்டா?
இது பைபிள் வாக்கா?அல்லது திரு இயேசு தன் வாயால் அல்லது செயலால் அறிவித்ததா? அல்லது திரு பால் அவர்கள் அறிவித்தது என்று நீங்கள் நம்புவதா? அப்படியானால் திரு இயேசு அவர்களை ஒருமுறையேனும் உயுருடன் பார்திராத, இன்னும் அவருடைய பரிந்துரையை அறிந்திராத, இன்னும் அதிகப்படியாக திரு இயேசு அவர்களின் பரிந்துரையை அறிய விரும்பாத, திரு பால் அவர்கள் எழுதியதை தான் முழுமையான பைபிள் என்று அறிவிக்க விரும்புகிறீர்களா?


For I determined not to know anything among you, except Jesus Christ, and him crucified. (1 Corinthians 2:2)



திரு கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்ற உங்கள் கருத்து சரியானது என்றால் அது எப்படி திரு இயேசு அவருக்கு மட்டும் சாத்தியம் ஆயிற்று? அவர் எப்படி சரீரத்துடன் பரலோகம் சென்றார்?

திரு இயேசு அவர்கள் சரீரத்துடன் பரலோகம் செல்ல வில்லை என்றால் அவருடைய உடல் அடக்கம் செய்த இடம் ஏது? பைபிளை இன்னும் ஒரு முறை வாசித்து பாருங்கள். திரு இயேசு அவர்களுடைய சரீரம் குகையினுள் இல்லாத நிலையில் நடந்த நிகழ்வுகளை அது விவரிக்கும்.
    

"Don't be alarmed," he said. "You are looking for Jesus the Nazarene, who was crucified. He has risen! He is not here. See the place where they laid him. (Mark 16:6)


And the angel answered and said unto the women, Fear not: for I know that you seek Jesus, who was crucified. He is not here: for he is risen, as he said. Come, see the place where the Lord lay. (Matthew 28:5-6)



திரு கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்ற உங்கள் கருத்து சரியானது என்றால் அது எப்படி திரு இயேசு அவர்கள் சரீரத்துடன் பரலோகம் சென்ற கதையை பைபிள் விவரிக்கிறது??? அப்படியானால் இந்த வசனங்கள் இடை சொருகள் என்று நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா? கீழே உள்ள பைபிள் வசனங்கள்  மூலம் இது உங்களுக்கு தெளிவாகும் என்று நம்புகிறோம்.


Then he said to them, “Why are you frightened, and why do doubts arise in your hearts? Look at my hands and my feet; it’s me! Touch me and see; a ghost does not have flesh and bones like you see I have. When he had said this, he showed them his hands and his feet. And while they still could not believe it (because of their joy) and were amazed, he said to them, “Do you have anything here to eat?” So they gave him a piece of broiled fish, and he took it and ate it in front of them. Then he said to them, “These are my words that I spoke to you while I was still with you, that everything written about me in the law of Moses and the prophets and the psalms must be fulfilled.” Then he opened their minds so they could understand the scriptures, and said to them, “Thus it stands written that the Christ would suffer and would rise from the dead on the third day, and repentance for the forgiveness of sins would be proclaimed in his name to all nations, beginning from Jerusalem. You are witnesses of these things. And look, I am sending you what my Father promised. But stay in the city until you have been clothed with power from on high.” Then Jesus led them out as far as Bethany, and lifting up his hands, he blessed them. Now during the blessing he departed and was taken up into heaven. (Luke 24:38 – 51)



திரு கொல்வின் அவர்களே, சொர்க்கத்தில் மனிதனை படைத்தது கப்ஸா என்று அறிவிக்க முனைகிறீர். ஆனால் இதனை முதலில் அறிவித்தது பைபிள் தானே? அப்படியானால் பைபிள் கப்ஸா என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, பைபிள் அடிப்படையில், இறைவன் மனிதனை படைத்த ஈடான் தோட்டம் எங்கு இருக்கிறது என்று தெளிவாக அறிவிக்காத நிலையில், அந்த தோட்டத்தின் மத்தியில் ஜீவா மரம் உள்ளது என்று அறிவிக்கிறது.

Then the LORD God formed the man from the dust of the earth and blew the breath of life into his nostrils. The man became a living being. The LORD God planted a garden in Eden, in the east. That's where he put the man whom he had formed. The LORD God made all the trees grow out of the ground. These trees were nice to look at, and their fruit was good to eat. The tree of life and the tree of the knowledge of good and evil grew in the middle of the garden. (Genesis 2:7-9)



திரு கொல்வின் அவர்களே, புதிய ஏற்பாடு அந்த ஜீவா மரம் அமைந்துள்ள இடம் சொர்கத்தின் நடு பகுதியில் உள்ளது என்று தெளிவாக அறிவிக்கிறது. அப்படியானால் இறைவன் மனிதனை படைத்த ஈடான் தோட்டம் சொர்க்கத்தின் மத்தியில் உள்ளது என்று தானேஅர்த்தம்? இல்லை என்று மறுப்பு அளிக்க விரும்பினால் கீழ் வரும் வசனத்திற்கு தெளிவான பைபிள் வசனங்கள் கொண்டு விளக்கம் அளியுங்களேன்.


He that has an ear, let him hear what the Spirit says unto the churches; To him that overcomes will I give to eat of the tree of life, which is in the midst of the paradise of God. (Revelation 2:7)



2
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


அப்படின்னா அவன் பூமிக்கு சிறக்கு வைத்து பறந்தா வந்தான்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, உங்கள் நம்பிக்கை அடிப்படையில் தகப்பன் இல்லாமல் தன்னுடைய தாயை அசுத்த படுத்தி பிறந்த சராசரி இயேசு அவர்களுக்கு சரீரத்துடன் சொர்க்கம் பறந்து செல்வது சாத்தியம் என்ற நிலையில், இறைவன் தன் கையால் படைத்த முதல் மனிதன், தாய் மற்றும் தந்தை இல்லாத அதிசய பிறவி, உயிரினங்கள் அனைத்துக்கும் தானே பெயர் சூட்டிய முதல் மனிதன், அவன் இறைவன் ஆணை படி, வானவர்கள் உதவிகொண்டு சொர்க்கத்தில் இருந்து பறந்து வருவது சாத்தியம் இல்லாததா? அற்ப மனிதர்கள் வடிவமைக்கும் வானூர்திகளே அசர வைக்கும் விதமாக விண்ணில் பறந்து செல்லும் வேளையில், அணைத்து உலகத்தையும் படைத்தது பரிபாலிக்கும் இறைவனின் படைப்பான முதல் மனிதன் சொர்க்கத்தில் இருந்து இறைவன் கட்டளைப்படி பறந்து வருவது என்ன அதிசயமா?


3

திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


உண்பதும் குடிப்பதும் கிறிஸ்த பரலோகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, பரலோகத்தில் உண்பது குடிப்பது இல்லை என்பது உங்கள் சொந்த பைபிள் விரிவுரை தானே? ஏனெனில் பைபிளில் இயேசு வேறு விதமாக அறிவிக்கிறார். கீழ் வரும் வசனங்களை பாருங்கள்... 


Then the mother of Zebedee’s sons came to Jesus with her sons and, kneeling down, asked a favor of him. “What is it you want?” he asked. She said, “Grant that one of these two sons of mine may sit at your right and the other at your left in your kingdom.” “You don’t know what you are asking,” Jesus said to them. “Can you drink the cup I am going to drink?” “We can,” they answered. Jesus said to them, “You will indeed drink from my cup, but to sit at my right or left is not for me to grant. These places belong to those for whom they have been prepared by my Father.” (Matthew 20:20-23)


"I can guarantee that I won't drink this wine again until that day when I drink new wine with you in my Father's kingdom." (Matthew 26:29)  



திரு கொல்வின் அவர்களே, மேலே உள்ள வசனங்களை படித்தீர்களா? தகப்பனின் ராஜ்ஜியம்,   சொர்க்கத்தில் அமைவதா அல்லது உலகதிலா? அப்படியானால், திரு இயேசு அறிவித்தது சொர்க்கத்தில் அருந்த போகும் மதுவை பற்றியது தானே?? தெளிவான பைபிள் வசனங்கள் கொண்டு மறுப்பு அளியுங்களேன்.

4
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


எந்த இடத்தில் படைத்தார் என்தை பைபளிள் குறிப்பிடவில்லை. ஆயினும் ஆதியாகமத்தை வாசிக்கும்போதும் பூமியிலேதான் உண்டாக்கினார் என்பது தெளிவு


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, எந்த வசனத்தில் இது உங்களுக்கு தெளிவானது என்று எங்களுக்கும் அறிவியுங்களேன்? இந்த வசனங்களில் பாம்பு பேசியது என்றும் அறிவிக்கிறது, இதனையும் நீங்கள் ஏற்கிறீர்கள் தானே?

இதற்கு முன்னரே, ஈடன் தோட்டம் எங்கு இருக்கிறது என்று தெளிவாக அறிவிக்காத நிலையில் அந்த தோட்டத்தின் மத்தியில் உள்ள ஜீவா மரம் அமைந்த இடம் சொர்க்கம் என்ற தெளிவான ஆதாரத்தை வெளியிட்டு இருந்தோம், அதற்கு நீங்கள் எந்த தெளிவான ஆதாரத்தையும் கொண்டு மறுப்பு அளிக்க முயலவில்லையே ஏன்?

5
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


செங்கொடியின் தளத்திற்கு சென்று இது தொடர்பாக பதிவு ஒன்று உள்ளது. அதற்கும் பதில் அளித்துவிட்டு வாருங்கள்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, இதற்கு முன்னரே பல முறை இதை போன்ற கேள்விக்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம். உதாரணமாக:


திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளியிடும் பொய்யுரைகளுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக, பதில் அளிப்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு இந்த இணைய தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள், மற்றும் தெளிவான மறுப்புகளை நாங்கள் வெளியிட்டு கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நம் இணையதளத்தில், வாசகர்கள் தலைப்புக்கு தொடர்புடைய கேள்விகளை எழுப்பும் பட்சத்தில், அவர்களுக்கும் நாம் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கங்கள் அளிப்பது வழக்கம். இந்த முறை திரு ஜான்சன் விக்டர் என்ற வாசகர், தான் வேறு ஒரு இணையதளத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு நாம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்து இருக்கிறார். இது போன்று உலகில் உள்ள ஏனைய இஸ்லாமியர்களுக்கு எதிரான இணையதளங்களில் விடுக்கப்படும் ஆதாரமற்ற தனி நபர் கருத்துக்களுக்கு, நாங்கள் இரு இளைஞர்கள் விடை அளிக்க முனைவது, மிக பளுவான வேலை என்பதனால் பொதுவாக இதனை நாம் செய்ய முனைவது இல்லை.




திரு கொல்வின் அவர்களே, இது என்ன விந்தை? எங்களுக்கு மறுப்பு அளிக்க நீங்கள் முனைந்து விட்டு, தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் பிற இணைய தளங்களுக்கு எங்களை பதில் அளிக்க ஆணை இடுவது எந்த விதத்தில் நியாயம்??? இறைவன் நாடினால் அதனையும் செய்ய முனைவோம் விரைவில்...

6
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


நான் கேட்ட 100 தாய் தந்தையர் பதிவுக்கு பதில் எங்கே சும்மா எழுத வேண்டும் என்பதற்கhக எதையாவது எழுதி கொட்ட வேண்டாம். தெளிவான பதில் தேவை.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, நாங்கள் பிரசுரித்த பைபிள் வசனம்:


Then answered Peter and said unto him, Behold, we have forsaken all, and followed thee; what shall we have therefore? And Jesus said unto them, Verily I say unto you, That ye which have followed me, in the regeneration when the Son of man shall sit in the throne of his glory, ye also shall sit upon twelve thrones, judging the twelve tribes of Israel. And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an hundredfold, and shall inherit everlasting life. But many that are first shall be last; and the last shall be first. (Matthew 19:27 – 29)

நாங்கள் முன்னரே அறிவித்த விளக்கம்:


உங்கள் நம்பிக்கை அடிப்படையில், திரு இயேசு தன் வாயால் அறிவித்த வாக்களிப்பை நீங்கள் ஏற்க மறுத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த பைபிள் வசனங்களை நாங்கள் இயற்ற வில்லை. மனிதனின் நற்செயல்களுக்கு ஒன்றுக்கு நூறு பகரமாக வழங்குவதாக அந்த வசனம் அறிவிக்க வில்லை, மாறாக எந்த உறவுகளுக்கு பகரமாக நூறு மடங்கு வழங்க விருக்கிறது என்பதனை அந்த வசனம் மிக தெளிவாக பட்டியல் இடுகிறது. உங்கள் கருத்தின் அடிப்படையில் ஒருவனுக்கு நூறு தாய் தந்தையர் இருக்க இயலாது என்றால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதனை அறிவித்த, அதனை இயற்றிய, இன்னும் இதனை இறைவேதமாக ஏற்றுள்ள நபர்களை தான் மன நல மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும். சரிதானே திரு கொல்வின் அவர்களே???



திரு கொல்வின் அவர்களே, உங்களுக்கு இன்னும் தெளிவாக வில்லை என்று நினைக்கிறேன், அல்லது பைபிள் அறிவிப்பது போல் கண் இருந்தும் குருடர் காதிருந்தும் செவிடராக நடக்க முயல்கிறீர்களா?

மேலே உள்ள பைபிள் வசனத்தை இன்னும் ஒரு முறை படித்து பாருங்கள். மேலே உள்ள பைபிள் வசனத்தில் பீட்டர், “தாங்கள் எல்லா உறவுகளையும்” விட்டு வருவதாக அறிவிக்கிறார், பொருள்களை அல்ல. இதற்கு பகரமாக, திரு இயேசு அவர்கள் ஒவ்வொரு உறவுகளையும் தெளிவாக பட்டியல் இட்டு விட்டு, அதற்கு நூறு மடங்கு தருவதாக தெளிவாக வாக்களிக்கிறார். இதை நாங்கள் வேதமாக ஏற்க வில்லை, நீங்கள் தானே வேதமாக ஏற்று உள்ளீர்கள். அப்படியானால் உங்கள் இயேசு பொய்யுரைத்தார் என்று நீங்களே ஒப்பு கொள்கிறீர்களா? அல்லது இதனை இயற்றிய முகவரி அற்ற நபர் தவறு செய்தார் என்று ஒப்பு கொள்கிறீர்களா???

திரு கொல்வின் அவர்களே, மனிதனுக்கு எப்படி நூறு தாய் தந்தை இருக்க முடியும் என்று கேட்கிறீர். இறைவனுக்கே (இயேசு) இறைவன் (எலோஹீம்) சரீரா தகப்பனாக இருக்கிறான் என்பதனை நம்ப முன்வரும் நீங்களா இதை போன்ற கேள்விகளை எழுப்புவது??? இன்றைய விஞ்ஞான உலகத்தில், வாடகை தாய், கரு முட்டை வங்கி, மற்றும் உயிரணுக்கள் வங்கி இயங்கும் நிலையில், இன்னும் க்ளோனிங் முறை பிறப்புகள் சாத்திய கூறுகள் நிறைந்து இருக்கும் இந்த கால கட்டத்திலா நீங்கள் இதை போன்ற விந்தையான கேள்விகளை எழுப்பி கொண்டு இருக்கிறிர்கள்???

திரு கொல்வின் அவர்களே, உங்கள் இறைவன் வாக்கு மீது உங்களுக்கே சந்தேகமா??? பைபிள் நம்பிக்கை அடிப்படையில் தாய் தந்தை இல்லாமல் ஆதி மனிதனை படைக்க வல்ல இறைவன், இன்னும் தகப்பன் இல்லாமல் திரு இயேசு அவர்களை படைக்க வல்ல இறைவன், தான் முன்னர் அறிவித்ததை/வாக்களித்ததை செய்ய வல்லமை இல்லாதவனா? விந்தையாக உள்ளது...

7
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


பொதுமொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவியுங்கள்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, “குறைந்த அளவே பிழைகள் கொண்ட ஒரு தமிழ் மொழியாக்கத்தை நீங்கள் அறிவீர்களாயின் அவற்றை எங்களுக்கு அறிவியுங்கள் ஆயுவுக்காக..” என்று நாங்கள் முன்னர் அறிவித்ததற்கு, பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவிக்க சொல்கிறீர்கள். இது எந்த பைபிள் பிழை திருத்தத்தை சார்ந்தது, இன்னும் இதனை எங்கு கண்டறியலாம், இன்னும் இது எந்த வகையில் ஏனைய பைபிள் பிழை திருத்தங்களை காட்டிலும் சிறந்தது, இன்னும் நாங்கள் முன்னரே விடுத்த பைபிள் மொழியாக்க பிழைகள் இந்த மொழியாகதிர்க்கும் பொருந்துமா என்பதனை தெளிவகுங்களேன், வாசகர்கள் பயன் பெற...

8
திரு கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:


குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் ஏராளமான முரண்பாடுகள உள்ளன. அனுமதித்தால் அவற்றினை தரலாம். அவற்றில் எது சரி என உங்களால் சொல்ல முடியுமா?


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, திரு குர்ஆன் மொழிபெயர்ப்பை பைபிள் பிழைதிருத்தம்/மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட முனைகிறீர். இதை போன்ற கேள்விக்கு இதற்கு முன்னறே பலமுறை நாங்கள் விளக்கம் அளித்துளோம். திரு குர்ஆன் மொழிபெயர்ப்பு அதனுடைய மூல அரபி வசனத்தை வெளியிட்டு, அதனுடன் தமிழில் விளக்கம் நிறைந்து இருக்கும். ஆனால் பைபிள் மொழியாக்கம் இது எந்த மொழியில் இருந்து மொழியாக்கம் செய்ய பெற்றது, இன்னும் இதன் மூல நூல் ஏது என்று விவரம் கூட இல்லாமல் பிழையான மொழிபெயர்ப்பை கொண்டு இருக்கும்.

இஸ்லாமியர்கள், திரு குர்ஆன் வழங்க பெற்ற அரபி மொழியிலே திரு குர்ஆனை ஓதுகிறார்கள். மொழியாக்கத்தை வசனங்களின் அர்த்தங்களை அறிவதற்காக எடுத்து கொள்கிறார்களே அன்றி, மொழியாக்கம் தான் முழுமையான வேதமாக ஏற்பது இல்லை. கிறிஸ்தவர்கள் பைபிள் எந்த மொழியில் இயற்ற பெற்றது, அதனை இயற்றிய நபர் யார், இன்னும் அதனை மொழி பெயர்த்த நபர் யார் என்ற தங்கள் மொழிபெயர்ப்பு பற்றிய அடிப்படை விவரங்கள் அறியாமலே அதனை வேதமாக கொண்டுள்ளார்கள்.  

எல்லாம் வல்ல இறைவனின் வாக்கான திரு குர்ஆன் வசனங்களை அற்ப மனிதர்கள் மொழிபெயர்ப்பது சுலபமான வேலை இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் பலவிதமான அர்த்தம் கொள்ளும் விதமாகவே திரு குர்ஆன் வசனங்கள் அமைந்து உள்ளது. ஆகையால் அதனை மனிதர்கள் மொழிபெயர்க்க முனையும் வேளையில் அறியாமல் சிறு பிழைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. இது ஒரு தனிப்பட்ட மனிதனின் முயற்சியில் ஏற்படும் பிழை. இருப்பினும் அப்படி ஒரு பிழையை நீங்கள் கண்டு, அதன் மொழியாக்க ஆசிரியருக்கு தெரிவித்தால், அதில் உண்மை இருப்பின் அதனை அவர் திருத்திக்கொள்ள  மறுக்க மாட்டார் / மறுக்கவும் கூடாது.

திரு குர்ஆன் மொழியாக்க பிழைகள், பைபிள் பிழைகளுக்கு நிகரானதாக இருக்காது என்று நம்புகிறோம். உதாரணமாக, பைபிள் “எலோஹீம்” என்ற இறைவனின் பெயரை, “தேவன்” என்று மொழி பெயர்த்து, அவன் தான் திரு இயேசு என்று அறிவிக்கும் அளவுக்கு பெரியதாக இருக்காது என்று நம்புகிறோம்.

பைபிள் பிழைதிருதங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் தனி நபர் முயற்சி அல்ல, அது ஒரு சபை, அல்லது இன்னும் அதிகபடியான தேர்ச்சி பெற்ற நபர்களை கொண்டு, பெரிய முதலீட்டில் வெளி வரும் பைபிளில் காண பெரும் அடிப்படை கோட்பாட்டு பிழைகள்.  இதை போன்று இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு முரணான மொழிபெயர்ப்பு நீங்கள் அறிவீர்களாயின், இன்னும் அதற்கு இஸ்லாமியர்களால் மறுப்பு அளிக்க பெறவில்லை என்ற நிலையில், எங்களுக்கு அதனை கோடிடுங்கள் ஆயுவுக்காக...           




திரு கொல்வின் அவர்களே, இனியேனும் வேறு இணையதளங்களுக்கு சென்று எங்கள் இணையதளம் போலியானது என்று வாய் வலிக்க கத்துவதை விடுத்து, நாங்கள் முன் வைக்கும் தெளிவான ஆதாரங்களுக்கும் தெளிவான பைபிள் வசனம் கொண்டு மறுப்பு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்.

-ஜியா & அப்சர்